ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

வீரமங்கை வேலுநாச்சியார்

இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத மேந்திப் போராடிய முதல் பெண் போராளி வீரமங்கை வேலுநாச்சியார் 1730 இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து சேதுபதி சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகவாக பிறந்தார் ஆண் வாரிசாக வளர்க்கப்பட்டார். ஆயுதப் பயிற்சி பெற்றார். பல மொழிகள் கற்றார். 1746ல் சிவகெங்கை மன்னர் முத்துவடுகநாதருக்கு மனைவியானார்.

1772ல் வெள்ளைக்கார வெறியர்களின் படையெடுப்பால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க இடம் மாறி மாறிச் சென்றார் வீரத்தாய் வேலுநாச்சியார். வெறியர்களின் கொட்டத்தை அடக்க நினைத்த வேலுநாச்சியார் அவர்கள் விருப்பாட்சியில் தங்கி ஹைதர் அலியைச் சந்தித்து அவருக்கே தெரிந்த உருது மொழியில், வெள்ளையர் எதிர்ப்பு பற்றி திறமையாக அழகுற பேசி விளக்கினார். வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட, ஹைதர்அலி உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார்.

ஏழாண்டுகாலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம்மாறி மாறி முகாமிட்டு, வெள்ளையர்களை விவேகத்துடன் எதிர்த்தார். இதற்கிடையில் தமது எட்டுவயது மகளையும் பாதுகாக்க வேண்டிய நிலை. அமைச்சர் தாண்டவராயன் பிள்ளையின் முயற்சியினால் சிவகெங்கை மக்கள் பிரதிநிதிகள் வேலுநாச்சியாரோடு கலந்து பேசியதன் மூலம் வீரமிக்க விடுதலைப்படை ஒன்று உருவாக்கப்பட்டது. மருது சாகோதரர்களுடன், வேலுநாச்சியாரே போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

1780 ஐப்பசித் திங்கள் 5ம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகெங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி ஒத்துழைப்போடு பீரங்கிப்படை ஒன்றும் தரப்பட்டது. படை காளையார் கோயிலை கைப்பற்றியது. சிவகெங்கையில் வேலுநாச்சியார் அவர்கள், தம்மைக் காட்டிக் கொடுத்காது வெள்ளையரால் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்டறை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார் நாச்சியார் தொடர்ந்து பூஜை செய்ய உத்திரவிட்டார்.

இந்தக் கோயில் கொல்லங்குடி வெட்டையார் 'காளியம்மாள்' என்று அழைக்கப்படுகிறது. இறுதியாக சிவகங்கை நகரைக் கைப்பற்ற சின்னமருது பெரிய மருது, வேலுநாச்சியார் அவர்கள் தரைலமையில் படை திரட்டப்பட்டது.

சிவகங்கை அரண்மைனயில் விஜயதசமி, நவராத்திரி விழாவிற்காக கூடிய மக்கள் கூட்டத்தில் பெண்கள் படை மாறுவேடத்தில் புகுந்து அதில் 'குயிலி' என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள். வேலுநாச்சியார், தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார்.

வேலு நாச்சியார் கைபட்பற்றிய தமது நாட்டிற்கு பெரிய மருதுவை தளபதியாகவும், சின்னமருதுவை அமைச்சராகவும்த நியமித்தார். வேலுநாச்சியார் மகள் வெள்ளச்சிக்கும் சக்கந்தி வேங்கண் தேவருக்கும் திருமணம் செய்து வைத்தார். 1780-1789 வரை ஆட்சியில் இருந்தார். 1789-ல் மருமகனுக்கு ஆட்சிப்பொறுப்பை மாற்றிக் கொடுத்தார். 1790-ல் அவரது மகளின் மறைவினால் மடைமுடைந்த வேலுநாச்சியார் இதய நோயாளியாகி சிகிச்சைக்காகபிரெஞ்சு நாட்டுக்குச் சென்றார்.

1793-ல் வேலு நாச்சியாரின் பேத்தி மரணம் நாச்சியாருக்கு துயரம் அதிதமானது. அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். பெரும் போராட்டங்களையும் சோதனைகளையும் சாதனைகளாக்கி, வீரசாகசங்கள் புரிந்து நாட்டை மீட்டிய வீரத்தாய்
25-12-1796 அன்று இறந்தார்.
இதன் தொடர்ச்சியாக இன்று வரை சிவகங்கைச் சீமையை ஆட்சி புரிந்த மன்னர்களின் வம்சாவழிப்பட்டியலை அரசாங்கத்தின் ஆவணக்காப்பகத்தின் தக்க ஆதாரங்களுடன் உண்மையினை நாட்டிலுள்ள அனைவரும் தெரிந்து கொள்ள அன்புடன் வெளியிடப்பட்டுள்ளது.

1ம்....1728 - 1749...முத்து வீஜயரகுநாத உ. சசிவர்ணத்தேவர்
2ம்....1749 - 1772...சசிவர்ண விஜயரகுநாத முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர்
3ம்....1780 - 1789...வீரமங்கை ராணி வேலு நாச்சியார் முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர்
4ம்....1790 - 1793...இளவரசி வெள்ளச்சி நாச்சியார் - ராணி வேலு நாச்சியாரின் ஒரே மகள்
5ம்....1793 - 1801...வேங்கை பெரிய உடையணத்தேவர் இளவரசி வெள்ளச்சி நாச்சியாரின் கணவர்
6ம்....1801 - 1829...கெளரிவல்லப உடையணத்தேவர் மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையணத்தேவரின் உடன் பங்காளி ராணி வேலு நாச்சியாரின்
சுவீகார மைந்தன்
7ம்....1829 - 1831...உ.முத்துவடுகநாதத்வேர்
8ம்....1831 - 1841...மு. போதகுருசாமித்தேவர்
9ம்....1841 - 1848....போ. உடையணத்தேவர்
10ம்..1048 - 1863....மு.போதகுருசாமித்தேவர்
11ம்..1863 - 1877....ராணி காதமநாச்சியார் போதகுருசாமி
12ம்..1877..............முத்துவடுகநாதத்தேவர்
13ம்..1878 - 1883....துரைசிங்கராஜா
14ம்..1883 - 1898....து. உடையணராஜா
15ம்..1898 - 1941....தி. துரைசிங்கராஜா
16ம்..1941 - 1963....து. சண்முகராஜா
17ம்..1963 - 1985....து.ச.கார்த்தகேயவெங்கடாஜலபதி ராஜா
18ம்..1986..............முதல் ராணி டி.எஸ்.கே.மதுராந்தகி நாச்சியார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல