வட கிழக்கு சீனாவின் ஜிலின் மாகாணத்திலுள்ள மிஷாஸி நகரைச் சேர்ந்த ஸியாவோ வெயி (Xiao Wei) என்ற மேற்படி சிறுவன், தனது நண்பர்களுடன் இணையத்தள நிலையமொன்றில் கணினி விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது இடம்பெற்ற மோதலில் கத்திக் குத்துக்கு ஆளானான். இந்நிலையில் மண்டை யோட்டில் ஊடுருவிய கத்தியை வெளியே எடுக்க, ஜிலின் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு சிறுவன் நடந்து சென்றுள்ளான்.
இது தொடர்பில் மேற்படி மருத்துவமனையில் நரம்பியல் சிகிச்சைப் பிரிவு பிரதிப் பணிப்பாளர் ஜான் ஷிஜுன் விபரிக்கையில், "சிறுவனது முகம் முழுவதும் இரத்தமாக இருந்தது. எனினும் அவன் சுயநினைவுடன் இருந்தது எமக்கு வியப்பை ஏற்படுத்தியது'' என்று கூறினார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக