தனியார் பொறியியல் கல்லூரியில் பி. டெக்., ஐ.டி., படித்த ஸ்ரீவித்தியா (வயது 20) என்பவரே தன் காதலன் நிலாய் (வயது 20) மீது மேற்படி அசிட் வீசியவராவார்.
காதலித்து கரம் பிடிக்கும் வேளையில் சின்னஞ்சிறு விடயத்திற்காக ஆவேசப் பட்டதால் நிகழ்ந்த இந்த விபரீத சம்பவம் குறித்து தெரியவருவதாவது கடந்த இரண்டாண்டிற்கு முன் தனியார் பொறியியல் கல்லூரியில் பயின்ற ஸ்ரீவித்தியா அவருடன் கல்வி பயின்ற நிலாய் என்பவரை காதலித்து வந்தார்.
இவர்களது காதல் விவகாரம் ஸ்ரீவித்தியாவின் வீட்டிற்கு தெரிய வர, கடந்தாண்டில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில் நிலாயின் தாத்தா இறந்துவிட, திருமணம் ஓராண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டது. முதலாண்டு முடித்தவுடன் கல்லூரிக்கு செல்வதை நிறுத்திக் கொண்ட ஸ்ரீவித்யாவிடம் கல்லூரியில் நடக்கும் உடை அலங்கார போட்டியொன்றில் தான் கலந்து கொள்ள முடிவு செய்திருப்பதாக நிலாய் தெரிவித்தார். ஆனால் இந்த நிகழ்ச்சியில் நிலாய் கலந்து கொள்வதை ஸ்ரீவித்தியா விரும்பவில்லை. இது குறித்து நிலாயிடம் பலமுறை கூறியும் கேட்காததால் தன் வீட்டிற்கு வரும் படி ஸ்ரீவித்தியா நிலாயிடம் கேட்டுக்கொண்டார்.
தனது காதலியின் அழைப்பை ஏற்ற நிலாயும் அங்கு சென்றார். அங்கே ஸ்ரீவித்தியா உடை அலங்கார போட்டியில் கல ந்து கொள்ளவேண்டாம் என்பதை பலமுறை வலியுறுத்தியும் நிலாய் கேட் காததால் ஆத்திரம் கொண்ட ஸ்ரீவித்தியா வீட்டு கழிவறை சுத்தப்படுத்த வைத்திருந்த, அசிட்டை எடுத்து, அவர் மீது ஊற்றினார்.
இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் நிலாய் அனுமதிக்கப்பட்டார். கழிவறை சுத்தம் செய்யும், அசிட் என்பதால், ஆழமான காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
காதலியை ஒன்றும் செய்ய வேண்டாம் என நிலாய் கேட்டுக் கொண்டதன் பேரில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் ஸ்ரீவித்யா மீது வழக்கு பதிவு செய்த பொலிஸார் அவரை கைது செய்தனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக