புதன், 24 மார்ச், 2010

ஆணுடன் கைகலப்பில் ஈடுபட்ட பெண் பொலிசாரிடம் ஒப்படைப்பு

பயணிகள் பஸ் வண்டியில் ஆணொருவருடன் கைகலப்பில் ஈடுபட்ட பெண்ணொருவர் பொலிசாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ள சம்பவமொன்று நேற்று அட்டனில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

கண்டியிலிருந்து அட்டன் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ்ஸில் பெண் ஒருவர் குயில்வத்தை பகுதியிலிருந்து ஏறி கதவருகே நின்றுள்ளார்.
இதையடுத்து அவரை பஸ்ஸின் உள்ளே செல்லுமாறு நடத்துனர் கூறியுள்ளார். தொடர்ந்து இது தொடர்பில் குறித்த பெண் நடத்துனரிடம் வாக்குவாதம் புரிந்துள்ளார். பின்னர் பஸ்ஸிலிருந்து ஏனைய ஆண் ஒருவருடனும் அதே பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி தொடர்ந்து அது கைகலப்பாக மாறியுள்ளது. விடயமறிந்த சாரதி பஸ்ஸை பொலிஸ் நிலை யத்திற்கு எடுத்துச் சென்று விடயங்களை கூறி பெண்ணை பொலிசாரிடம் ஒப்படைத்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல