புதன், 15 செப்டம்பர், 2010

வாகனம் ஓட்டுகையில் அதிகம் வழி தவறும் ஆண்கள்

ஆண்களைப் போலவே இன்று பெண்களும் வாகனம் ஓட்டுவது சர்வசாதாரணமாகி விட்டது. ஆனால் வாகனம் ஓட்டும் ஆண்கள், பெண்களை விட அதிகம் வழிதவறிச் சென்றுவிடுகிறார்கள். ஆண்கள் வழி தெரியாமல் ஓராண்டுக்கு 450 கிலோமீட்டர் தூரத்துக்கு தேவையில்லாமல் ‘சுற்றுகின்றனர்’.

இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. பெண் வாகன ஓட்டிகளைப் போலில்லாமல் ஆண்கள் பிறரிடம் வழி கேட்கத் தயங்குகின்றனராம். கால்வாசி ஆண்கள், அரைமணி நேர யோசனைக்குப் பிறகே அடுத்தவர்களிடம் வழி கேட்கிறார்களாம். 12 சதவீதம் பேர் கடைசி வரை வழி கேட்பதே இல்லை என்று கண்டறியப்பட்டிருக்கிறது.

இப்படி வழி தவறி அலைவதால் ஓர் ஆண் தனது வாழ்நாளில் மூன்று இலட்ச ரூபாய்க்கு மேல் எரிபொருளுக்காக கூடுதலாகச் செலவழிக்கிறார். தமக்கு வழி தெரியவில்வை என்று உணரும்போது 74 சதவீதப் பெண்கள் உடனடியாகப் பிறரிடம் உதவி கேட்டுவிடுகின்றனராம்.

இன்னொரு சுவரஸ்யமான விஷயம் வாகன ஓட்டி ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி பெண்களிடம் வழிகேட்கவே விரும்புகிறார்களாம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல