புதன், 20 அக்டோபர், 2010

குற்றம் நிரூபணமானால் சவூதி இளவரசருக்கு மரணதண்டனை (படங்கள் இணைப்பு)

ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த வேலைக்காரனை அடித்துக் கொன்ற குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டால், சவூதி இளவரசர் அல்சவுத்துக்கு மரண தண்டனை கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சவூதி மன்னர் அப்துல்லாவின் பேரன் அல்சவுத் (34) தனது வேலைக்காரன் அப்துல் ஆசிஸுடன் (32) கடந்த பெப்ரவரி மாதம் லண்டனில் உள்ள லேண்ட் மார்க் ஹோட்டலில் தங்கியிருந்தார். அப்போது ஆசிஸ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இளவரசரின் தந்தையார்

அவரது தலையில் பலத்த காயம், கன்னத்தில் பல்லால் கடித்த காயம் என்பன பிரேத பசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து இளவரசர் அல்சவுத்திடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.கொலை பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று கூறிய அல்சவுத், சம்பவம் நடந்த தினம், ஆசிஸும் நானும் மது குடித்துவிட்டு படுத்தோம்.

அதிகாலை எழுந்து பார்த்தபோது இறந்து கிடந்தார் என்றார். அல்சவுத் அறையை பொலிசார் சோதனையிட்ட போது அவரது உள்ளாடையில் இரத்தக் கறை இருந்தது.

இளவரசரின் செல்போனில், ஆசிஸின் அரை நிர்வாண புகைப்படங்களும் இருந்தன. கொலை நடந்ததற்கு ஒரு வாரம் முன்பு ஹோட்டல் வளாகத்தில் உள்ள லிப்ட்டில் வைத்து அப்துல் ஆசிஸை அல்சவுத் கண்மூடித்தனமாக அடித்த காட்சிகள், அதில் இருந்த இரகசிய கமராவில் பதிவாகியிருந்தன.கொலை கொள்ளை மற்றும் ஓனச்சேர்க்கை என்பவற்றுக்கு சவூதியில் மரண தண்டனை வழங்கப்படுவது வழக்கமானது.எனவே இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மரணதண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

அரை நிர்வாண புகைப்படங்களும் இருந்தன. கொலை நடந்ததற்கு ஒரு வாரம் முன்பு ஹோட்டல் வளாகத்தில் உள்ள லிப்ட்டில் வைத்து அப்துல் ஆசிஸை அல்சவுத் கண்டித்தனமாக அடித்த காட்சிகள், அதில் இருந்த இரகசிய கமராவில் பதிவாகியிருந்தன.கொலை கொள்ளை மற்றும் ஓனச்சேர்க்கை என்பவற்றுக்கு சவூதியில் மரண தண்டனை வழங்கப்படுவது வழக்கமானது.எனவே இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மரணதண்டனை விதிக்கப்படும் என தெவிக்கப் படுகின்றது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல