சத்பால் கோர் சிங்(44 வயது)
கிழக்கு லண்டனிலுள்ள பார்கிங் எனும் இடத்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான சத்பால் கோர் சிங்(44 வயது) என்ற இந்த பெண்மணி, அஜித் என்ற தனது மகனை இவ்வாறு படுகொலை செய்துள்ளார்.
அஜித்தின் பராமரிப்பு தொடர்பில் உள்ளூர் நகரசபையின் சமுகசேவை பிரிவுக்கு அவர் ஒத்துழைப்பு வழங்கத் தவறியிருந்ததால், அஜித்தின் பராமரிப்பை அப்பிரிவு பலவந்தமாக பொறுப்பேற்கலாம் என்ற அச்சத்திலேயே இந்தப் படுகொலையை அவர் செய்ததாக கூறப்படுகிறது.
படுகொலையை செய்த சத்பால் கோர் சிங், பொலிஸாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ““நான் எனது மகனை படுகொலை செய்துவிட்டேன். நானும் தற்கொலைக்கு முயற்சித்தேன்'' என்று தெரிவித்துள்ளார்.
சத்பால் கோர் சிங் மனநல பிரச்சினைகளுக்கு உள்ளான ஒருவர் என அவரது சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் வாதிட்டனர்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக