வெள்ளி, 5 நவம்பர், 2010

இலங்கையில் காதலர் பூங்கா

காதலர்கள்
இளைஞர் அதுவும் குறிப்பாக புறம் மறந்து காதல் உணர்வை வெளிப்படுத்த விளையும் ஜோடிகள், காவலர்களின் தொல்லையின்றி கூடுவதற்காக சிறப்புப் பூங்கா ஒன்றை உருவாக்கப் போவதாக இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது.

இந்த ஆண்டின் முற்பகுதியில் இரு நகரங்களில் பொது இடங்களில் கோஞ்சிக்குலாவிக்கொண்டிருந்த காதலர்கள் பலர் காவலர்களால் கைது செய்யப்பட்டனர். ஆனால், அந்த நிகழ்வு அரசுக்கு சிறிது சங்கடத்ததை ஏற்படுத்தியிருந்தது. அதனையடுத்தே இந்த திட்டத்தை அரசாங்கம் அமல் படுத்தவுள்ளது.

இளம் ஜோடிகள் தமது உணர்வுகளை ஒருவருக்கு ஒருவர் தடையின்றி வெளிப்படுத்த வழி செய்ய வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இதனைச் சொன்னவர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவரான லலித் பியும் பெரேரா.

இளைஞர்களுக்கான பூங்கா ஒன்றை அதிலும் குறிப்பாக காதலர்களுக்கான பூங்கா ஒன்றை அமைக்க வேண்டும் என்பது தமது நீண்டகாலத் திட்டம் என்று அவர் கூறுகிறார்.

ஆனால், குருநாகலிலும், மாத்தறையிலும் கட்டியணைத்தவாறும்,

முத்தமிட்டவாறும் ஒன்றாகக் கூடியிருந்த ஜோடிகளை காவலர்கள் கைது செய்ததை அடுத்து இதன் அவசியம் மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அன்று கைது செய்யப்பட்டவர்களில் திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்களும், அவ்வளவு ஏன் கல்யாணம் ஆன ஜோடிகளும் கூட பொறாமை கொண்ட காவலர்களால் கைது செய்யப்பட்டதாக அவர் கூறுகிறார்.

காதலர்கள் சௌகரியமாக சந்தித்து மகிழ்வதற்கு உரிய இடத்தை ஏற்பாடு செய்யத் தவறியதன் காரணமாக இந்த கைதுகளுக்கும், அதனால், காதலர் அனுபவித்த சிரமங்களுக்கும் தானும் ஒரு வகையில் பொறுப்பு என்று இளைஞர் விவகார அமைச்சர் கவலைப்பட்டதாக பெரேரா கூறினார்.

புதிதாக காதலர்களுக்காக உருவாக்கப்படவுள்ள பூங்கா நாடாளுமன்றத்துக்குப் பக்கத்தில் ஒரு ஆற்றின் கரையில் அடுத்த ஆண்டு அமைக்கப்படும்.

சிறார்கள் அங்கு அனுமதிக்கப்படமாட்டார்கள், ஆனால் இளைஞர்களை இலக்கு வைத்தே இந்த பூங்கா அமைக்கப்படுகின்ற போதிலும் வேறு வகையிலான வயதுக்கட்டுப்பாடு எதுவும் அங்கு இருக்காது.

இசைக் கலைஞர்களும், ஏனைய கலைஞர்களும் அங்கு தமது நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.

சமூக மட்டத்தில் இது குறித்து சிறிது சர்ச்சை இருக்கிறது. ஆனால் அது ஒன்றும் அரசியலுடனோ அல்லது இனவிவகாரத்துடனோ தொடர்புடையதல்ல தலைமுறை இடைவெளியுடன் சம்பந்தப்பட்டது மட்டுந்தான்.

இலங்கை இளைஞர்கள் பொதுவாக புதுமை விரும்பிகள் என்று இளைஞர் விவகார அதிகாரிகள் கூறுகிறார்கள்.

இப்படியான இடங்கள் காதலர்களை வேடிக்கை பார்ப்பவர்களால் இலக்கு வைக்கப்படலாம் என்ற சிலர் கவலைப்பட்டாலும், இப்படியான பூங்காக்களை மேலும் பல இடங்களிலும் அறிமுகப்படுத்தவும் திட்டம் இருக்கிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல