ரஷ்ய நகரான யரோஸ்லவ்வில் வசிக்கும் மேற்படி தாய் (வயது 56), தனது மகள் (வயது 33) வெடிகுண்டுகளுடன் புறப்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுத்ததையடுத்து மொஸ்கோ நகலிருந்து மொரோக்கோ புறப்படவிருந்த குறிப்பிட்ட விமானம் பல மணி நேர தாமதத்தை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் பயங்கரவாத அச்சுறுத்தலை விடுத்த குற்றச்சாட்டில் தாய் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மொரோக்கோ பிரஜை ஒருவரின் மீது காதல் கொண்ட தனது மகள், தனது காதலரை திருமணம் செய்வதற்காக மொரோக்கோ புறப்பட ஆயத்தமான போது, செய்வதறியாது அவரைத்தடுத்து நிறுத்தும் முகமாக போலியான இந்த அச்சுறுத்தலை விடுத்ததாக மேற்படி தெரிவித்துள்ளார்.
விசாரணைகளையடுத்து மகள் மொரோக்கோவுக்கு வேறொரு விமானத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக