வியாழன், 18 நவம்பர், 2010

மரணதண்டனை உத்தரவில் கையெழுத்திட மறுத்த ஈராக் ஜனாதிபதி

ஈராக் முன்னாள் சர்வாதிகாரி சதாம் உசேன் ஆட்சியில் இருந்த காலத்தில் வெளிநாட்டு மந்திரியாகவும்,துணை அதிபராகவும் இருந்தவர் தாரிக் அஸீஸ். சதாம் உசேன் காலத்தில் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக இவர் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கோர்ட்டு இவருக்கு மரண தண்டனை விதித்தது.

இந்த மரணதண்டனையை நிறைவேற்ற வேண்டாம் என்று ரஷியாவும், வாடிகனும் கேட்டுக்கொண்டன. அவர் வயதை கருதி அவரை மனிதாபிமானத்துடன் நடத்தவேண்டும் என்று அந்த நாடுகள் கேட்டுக்கொண்டன.

இந்த நிலையில் அவரது மரணதண்டனைக்கான உத்தரவில் ஈராக் ஜனாதிபதி ஜலால் தலாபானி கையெழுத்திட மறுத்து விட்டார். இது தொடர்பாக அவர் பிரஞ்சு டி.வி.சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறிஇருப்பதாவது:-

தாரிக் அஸீஸுக்காக நான் பரிதாப்படுகிறேன். ஏனெனில் அவர் ஈராக்கி கிறிஸ்தவர். அதோடு அவர் 70 வயதை தாண்டிய முதியவர். அதனால் அவரை தூக்கிலிடும் உத்தரவில் கையெழுத்து போட மாட்டேன்.

இவ்வாறு ஜலால் தலாபாணி கூறினார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல