புதன், 15 டிசம்பர், 2010

தொலைபேசியில் 2மில்லியன் மோசடி செய்த தமிழருக்கு 5வருட சிறை!

பிரித்தானிய நாட்டில் உள்ள o2பிரபல தொலைபேசி நிறுவனத்தில் முறைகேடாக பாவித்து குறைந்தது இரண்டு மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான சிம் அட்டைகளை திருடி முறைகேடாக பாவித்துள்ளது குறித்த நிறுவனத்தால் கண்டு பிடிக்க பட்டுள்ளது .

ஒரு சிம் அட்டையை பாவித்து ஒரே சம வேளையில் ஆறு நபர்களுடன் உரையாடும் விதமாக இணைப்பு கொடுத்துள்ளனர் .

அத்து மட்டு மில்லது குறித்த நிறுவனத்திற்கு பணம் கட்டாது மேலும் பல சிம் அட்டைகளை கொள்வனவு செய்து மோசடிகளை செய்துள்ளனர் .

கணணி தொழில் நுட்பத்தின் ஊடாகவே குறித்த தொலைபேசி இணைப்புகளிற்கு இணைப்பை ஏற்படுத்தியுள்ளனர் .26வயதுடைய அசோக்குமார் டிவிக்கன்ஹாம் பகுதியை சேர்ந்தவர் இவரது கூட்டாளிகளான மொகமட் அஹ்மல் மற்றும் பஹாட் லொன, ஆகிய இருவரும் பேர்மிங்ஹாம் பகுதியை சேர்ந்தவர்கள். இவர்களும் இணைந்தே இந்த மோசடியில் ஈடு பட்டுள்ளனர் .
லண்டன் பொருளாதார குற்ற தடுப்பு காவல் துறையினரே குறித்த மோசடி நபர்களை மடக்கி பிடித்து நீதிமன்றில் ஒப்படைத்தனர் . இதை அடுத்து குறித்த மூன்று குற்றவாளிகளிற்கும் தலா ஐந்து வருட கடூழிய சிறை தண்டனை விதிக்க பட்டுள்ளது .
அசோக்குமார் என்பவர் தமிழர் என அடையாளம் காணப்பட்டுள்ளார் .
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல