புதன், 15 டிசம்பர், 2010

கிறிஸ்மஸ் தீவு அருகே அகதிப் படகு பயங்கர விபத்து ஏராளமானோர் மரணம்! (காணொளி இணைப்பு)

அடையாளம் காணப்படாத அகதிப்படகொன்று இன்று காலை ஏழு மணியளவில் வடக்கு ஆஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுகளை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது மோசமான வானிலை காரணமாக விபத்துக்குள்ளானதில் பெரும்பலான அகதிகள் கடலில் விழுந்து இறந்து போனதாகத் தெரிகிறது.

சுமார் 100- க்கும் மேற்பட்டவர்கள் பயணப்பட்ட அந்தப் படகு மிகவும் பழுதான நிலையில் இருந்ததாகவும் அது அனர்த்தனமான கடல் அழுத்தத்தை தாக்குப் பிடிக்க முடியாமையாலும் உடைந்து சிதறி கடலில் மூழ்கியதாகத் தெரிகிறது.

இப்படகில் பயணித்த வெகு சிலரே உயிர் பிழைத்திருப்பார்கள் என்றும். ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை, குடியேற்றத் துறை, போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்திருப்பதாகவும் தெரிகிறது.

பொதுவாக ஆப்கான், பங்களாதேஷ்,இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளைச் சார்ந்த அகதிகள் அதிக அளவில் ஆஸ்திரேலியாவை நோக்கி தஞ்சக் கோரிக்கையுடன் பயணப்படும் நிலையில் இந்தப் படகில் இருந்தவர்கள் தமிழர்களா? என்று இன்னும் அடையாளம் காணமுடியவில்லை. இறுதியாக கிடைத்த தகவலின் படி ஐம்பது பேர் வரை கடலில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல