புதன், 15 டிசம்பர், 2010

காயமடைந்த பூசகர் நேற்றிரவு உயிரிழந்தார்

சங்கானை முருகமூர்த்தி ஆலயத்திற்கு முன்பாக வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆலயத்தின் பிர தமகுரு நித்தியானந்த சர்மா (வயது 56) சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.

கடந்த சனிக்கிழமை சங்கானை முருக மூர்த்தி ஆலயத் திற்கு முன்பாக வைத்து ஒரே குடும் பத்தைச் சேர்ந்த மூன்று பூசகர்கள் இரவு 8.30 மணியளவில் இனந்தெரியாத ஆயுததாரி களின் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக் காகி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பா ணம் போதனா வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒருவரான நித்தியானந்த சர்மா சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்ததாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல