ஞாயிறு, 23 ஜனவரி, 2011

பிட்சா, பர்கர் உணவுக்கு தடை?

பிட்சா, பர்கர் போன்ற, "ஜங்க் புட்' உணவு விற்பனையைத் தடை செய்வது குறித்து, விரைவில் முடிவெடுக்கப்படும் என, ஐ.நா.,வின் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

உலகளவில் பிட்சா, பர்கர், நூடுல்ஸ் போன்ற விரைவு வகை உணவுகளை உண்பதன் மூலம், நான்கு கோடி குழந்தைகள், அதிக எடை மற்றும் குண்டாக இருப்பதாக, ஐ.நா.,வின் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்த வகை உணவுகளை உண்பதன் மூலம், கட்டுப்படுத்த முடியாத அளவில் உடலில் கொழுப்பு அதிகரித்து, அதனால், ஆண்டுதோறும் எதிர்பாராத மரணங்களும் நிகழ்கின்றன.

இதனால், இவ்வகை உணவுகள் விற்பனையைக் கட்டுப்படுத்துவது அல்லது தடை செய்வது குறித்து, இந்தாண்டு செப்டம்பர் 19 மற்றும் 20 தேதிகளில் நடக்கும் ஐ.நா., பொதுக் குழுவில் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்தாலோசிக்க உள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல