வியாழன், 10 பிப்ரவரி, 2011

வெளிநாடு செல்லும் காதலரை தடுக்க குண்டுப் புரளியை கிளப்பிய பெண்

தனது காதலர் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்று தன்னை பிரிந்து செல்வதை தாங்க முடியாத பெண்ணொருவர், விமானத்தில் குண்டு இருப்பதாக புரளியை கிளப்பி பொலிஸான் பிடியில் சிக்கிக் கொண்ட சம்பவம் சிலியில் இடம் பெற்றுள்ளது.

பிரான்சிஸ்கோ கல்லேகுயிலஸ் என்ற பெண்ணே இவ்வாறு போலி அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட் டுள்ளார்.

அவன் காதலர் மார்கோ அரான்சிபியா (39 வயது) கப்பல் ஒன்றில் பணியாற்றுவதற்கான வேலை வாய்ப்பை பெற்று ஸ்பெயினுக்கு செல்வதற்காக சிலியிலுள்ள சான்தியகோ சர்வதேச விமான நிலையத்தை ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்துள்ளார்.

இந்நிலையில் பிரான்சிஸ்கோ விமான நிலைய அதிகாரிகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தனது காதலர் பயணம் செய்யவிருந்த விமானத்தில் குண்டு இருப்பதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளார். இதனையடுத்து விமானத்திலிருந்த 312 பயணிகளும் வெளியேற்றப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டது.

தொடர்ந்து போலியாக அச்சுறுத்தலை விடுத்த பிரான்சிஸ்கோ கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி விமானம் ஒரு நாள் காலதாமதத்துக்கு பின் திங்கட்கிழமை இரவு ஸ்பெயினுக்கு புறப்பட்டது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல