எனவே, கடந்த 10-ந் தேதி அன்று குடும்பக்கட்டுப்பாடு அதிகாரிகள் அதிரடியாக வீட்டுக்குள் புகுந்து யாங்குவானின் மனைவியை பிடித்துச் சென்று, அடித்து, உதைத்து மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், அந்தப் பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து வயிற்றில் இருந்த 8 மாத கருவை டாக்டர்கள் உதவியோடு கலைத்தனர். குழந்தை பிறப்பதற்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக யாங்குவான் தெரிவித்திருக்கிறார்.
சீனாவில், இதுபோன்று ஏராளமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக போலீசாரிடம் புகார் தெரிவித்தால், `குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான விவகாரங்களில் தலையிட முடியாது` என கூறி விடுகின்றனர்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக