சனி, 23 அக்டோபர், 2010

கருப்பை புற்று நோய்

கருப்பை புற்று நோய் .,மார்பகப் புற்று நோய் போன்றவை பெண்களுக்கு மட்டுமே வரும் புற்று நோய்கள் இந்தப் புற்று நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள், அறிகுறிகள், சிகிச்சைக்கான வழிமுறைகள்.... கர்ப்பப்பை புற்று நோய்.

இந்தப் புற்று நோய் பெரும்பான்மையாக 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கே வருகிறது. உடல் பருமன், இரத்த அழுத்தம் , நீரிழிவு நோய் உடைய பெண்களுக்கு இந்தப் புற்று நோய் வரும்வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்நோய்க்கு துவக்கக் காலத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.இல்லையெனில் இது கர்ப்பப்பையின் உட்புற பாகங்கள், பிறப்புறுப்பு ,சிறுநீர்பை பெருங்குடல் ஆகியவற்றுக்கு இந்நோய் பரவி விடும்.

இதன் பிறகு இரத்தம் மூலமாக உடலின் பிற பாகங்களுக்கும்பரவி அழித்து விடும்.ஒழுங்கற்ற மாதவிலக்குதான் இந்தப் புற்று நோய்க்கான முக்கிய அறிகுறியாகும்.கர்ப்பப்பை வாய் புற்று நோய் இந்தப் புற்று நோய் பாதிப்பிருந்தால் பிறப்புறுப்பில் அதிகப்படியான நீர் அல்லது ரத்தக்கசிவு தொடரும். .இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல