வெள்ளி, 29 அக்டோபர், 2010

சிறையில் உருவான எழுத்தாளர்!

உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரான ஓ ஹென்றி, ஆரம்பத்தில் ஒரு வங்கியில் காசாளராகப் பணியாற்றினார்.

ஒரு தடவை வங்கியின் கணக்கு சரிபார்க்கப்பட்டபோது ஒரு பெருந்தொகை குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


யாரோ செய்த மோசடி, அப்பாவியான ஓ ஹென்றி மீது விழுந்தது. வங்கிப் பணத்தை மோசடி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ஓ ஹென்றி.

நிரபராதியான தான் சிறையில் அடைக்கப்பட்டது ஓ ஹென்றியின் மனதில் பெரும் வேதனையை ஏற்படுத்தியது.

அதை மறப்பதற்காக சிறைச்சாலையிலேயே கதை, கட்டுரைகள் எழுத முயற்சி செய்தார் அவர்.

சிறையிலேயே நல்ல கதைகளை எழுதினார் ஓ ஹென்றி.

சிறையை விட்டு வெளியே வந்த அவருக்கு வேறு வேலை கிடைக்கவில்லை. எனவே அவர் எழுதுவதையே தொழிலாக்கிக் கொண்டார்.

பின்னாளில் பிரபல கதாசிரியரான ஓ ஹென்றி, பெரும் புகழும், பொருளும் ஈட்டினார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல