ஆட்டோ, மோட்டார் சைக்கிள் விப த்தில் இளைஞர் ஒருவர் படுகாயம டைந்துள்ளார். இச்சம்பவம் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் யாழ். பேருந்து நிலையத்திற்கு அருகாமை யில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் கல்வியங்காட் டைச் சேர்ந்த ப.வசந்தகுமார் (வயது-34) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மின்சாரம் தாக்கியதில் இளைஞர் படுகாயம்
மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசரசிகிச்சைப்பிரிவில் அனும திக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் கரவெட்டி கிழக்கைச் சேர்ந்த ம. கிருஷ்ணன் (வயது-26)என்பவரே பாதிக்கப்பட்டவராவார். இச்சம்பவம் நேற்று முன்தினம் கரவெட்டியில் இடம்பெற்றுள்ளது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக