ஞாயிறு, 28 நவம்பர், 2010

பாகிஸ்தானில் 3 வயது இந்து சிறுமி கடத்தல்

பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் உள்ள காஷ்மோர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் கணேஷ் சந்த். அந்த பகுதியில் கேபிள் டி.வி. நடத்தி வருகிறார். கணேஷின் மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் அருகில் உள்ள கோவிலுக்கு சென்றிருந்தனர். கோவிலுக்கு வெளியே ஒரு கடையில் இரண்டு குழந்தைகளும் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, துப்பாக்கி ஏந்திய மர்ம மனிதர்கள் வந்து இளைய மகளை கடத்திச் சென்றனர்.

கடத்திச் செல்லப்பட்ட சிறுமியின் பெயர் ஆஞ்சல் (வயது 3). கடத்தல் நடந்து 2 நாட்களாகியும் இன்னமும் அந்த சிறுமி மீட்கப்படாததால் அந்த பகுதியில் உள்ள இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. காஷ்மோர் போலீஸ் நிலையம் முன்பு நேற்று நடந்த முற்றுகை போராட்டத்தில் முஸ்லிம் அமைப்பினரும் கலந்து கொண்டனர்.

பணயத் தொகை கேட்டு கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், அதை போலீசார் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்கள். மேலும், சிறுமியை விரைவில் மீட்க கோரியும் கோஷம் எழுப்பினார்கள்.Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல