ஞாயிறு, 28 நவம்பர், 2010

ஆலிவுட் நடிகை மீது நடிகர் வழக்கு

ஆலிவுட் நடிகர் சார்லி சீன் மீது நிர்வாண புகழ் நடிகை கிறிஸ்டினா என்கிற கேப்ரி ஆண்டர்சன் சமீபத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்தார். நியுயார்க்கில் உள்ள மான்கட்டான் ஓட்டல் அறையில் தங்கி இருந்தபோது, தன்னை அடித்து உதைத்ததோடு கத்தியை காட்டி சார்லி சீன் மிரட்டினார் என்று சமீபத்தில் கிறிஸ்டினா தெரிவித்தார். மேலும், ஓட்டல் குளியல் அறையில் பூட்டி வைத்தாகவும் கூறினார்.


இந்த தகவலை, டி.வி. பேட்டி ஒன்றில் கிறிஸ்டினா கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், `தொடர்ந்து இதுபோன்ற குற்றச்சாட்டை பகிரங்கமாக தெரிவிக்காமல் இருக்க வேண்டுமானால் ரூ.5 கோடி அளிக்குமாறு கிறிஸ்டினா மிரட்டுகிறார்' என சார்லி சீன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சார்லி சீன் வழக்கு தொடர்ந்ததும், கடந்த மாதம் நடைபெற்ற ஓட்டல் சம்பவம் குறித்து நியுயார்க் போலீசில் இப்போது புகார் அளிக்க கிறிஸ்டினா முடிவு செய்திருக்கிறார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல