வெள்ளி, 26 நவம்பர், 2010

காதலிக்கும் பெண்னை கண்டுபிடித்து தருமாறு அரசாங்கத்திற்கு இலத்திரனியல் அஞ்சல்

விருந்துபசாரமொன்றில் தான் சந்தித்த பெண்ணொருவரை கண்டுபிடிக்கத் தனக்கு உதவுமாறு அரசாங்க திணைக் களமொன்றின் அனைத்து ஊழி யர்களுக்கும் அரசாங்க பணியாளர் ஒருவர் இலத்திரனியல் அஞ்சல் அனுப்பிய சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது

குடிவரவு திணைக்களத்தில் பணியாற்றும் மேற்படி நபர், விருந்துபசாரத்தில் சந்தித்த பெண் தன் மனதை மிகவும் பாதித்துள்ளதாகவும் அவரை கண்டுபிடிக்க முடியாமல் தனது மனம் வேதனையில் வாடுவதாகவும் எவராவது அவரைக் கண்டு பிடிக்க உதவ முடியுமா எனவும் கேட்டு அரசாங்க திணைக்களத்தை சேர்ந்த அனைவருக்கும் திங்கட்கிழமை இலத்திரனியல் அஞ்சல் அனுப்பிவைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த இலத்திரனியல் அஞ்சல் தொடர்பில் மதிப்பீடுகளை மேற்கொண்டு, அரசாங்க திணைக்களமொன்றின் செயற்பாடுகளுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் இலத்திரனியல் அஞ்சல்களை அனுப்பிவைத்த மேற்படி நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க குறிப்பிட்ட அரசாங்க திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல