சனி, 13 நவம்பர், 2010

ஆங் சான் சூகி விடுதலை!

மியான்மர் நாட்டின் ஜனநாயக தேசிய லீக் கட்சித் தலைவர் ஆங் சான் சூகி விடுதலை செய்யப்பட்டார். மியான்மரில், கடந்த 1990ல் ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலில், தேசிய ஜனநாயக லீக் கட்சித் தலைவர் ஆங் சான் சூகி அமோக வெற்றி பெற்றார். ஆனால், அவரை ஆட்சிக்கு வர விடாமல் ராணுவ ஆட்சி, வீட்டுச் சிறையில் அடைத்தது.

இதற்கிடையே, ராணுவ தலைவர் தான்ஷ்வீ தலைமையிலான அரசு, கடந்த 7ம் தேதி பொதுத் தேர்தலை நடத்தியது. நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக தேசிய லீக் கட்சி, ஆட்சிக்கு வராதபடி ராணுவ அரசு பல கெடுபிடிகளை ஏற்படுத்தியது. இதனால், இக்கட்சி இந்த தேர்தலை புறக்கணித்து விட்டது. இந்நிலையில், ஆளும் ஐக்கிய ஒற்றுமை மேம்பாட்டு கட்சி 80 சதவீத ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்றுள்ளதாக அக்கட்சி பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 21 ஆண்டுகளில் 15 ஆண்டு காலம் வீட்டு சிறையில் இருந்த ஆங் சான் சூகி தன்னுடைய வீட்டுக் காவலை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சமீபத்தில் முறையீடு செய்தார். ஆனால், இந்த மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. கடந்த ஆண்டே சூகி விடுதலை ஆகியிருக்க வேண்டும். ஆனால், அமெரிக்காவை சேர்ந்த ஜான் எட்டாவ் என்பவர், பாதுகாப்பை மீறி இவரை வீட்டுச் சிறையில் சந்தித்ததால் வீட்டுக் காவல் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அவரது தண்டனைக் காலம் முடிவடைகிறது. இதனால், அவர் விடுவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு மியான்மர் நாடு முழுவதும் எழுந்தது. இந்நிலையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல