12வது மாடியில் உள்ள வீட்டின் உரிமையாளருடன் பால்கனியில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பேசிக் கொண்டே பின்னால் அடியெடுத்து வைத்த ஜாவ் ஷி, பாலன்ஸ் தவறி 12வது மாடியில் இருந்து கீழே விழுந்தார்.
அதிர்ஷ்டவசமாக, அவர் விழுந்த பகுதியில் நீச்சல் குளம் இருந்ததால் உயிர் பிழைத்தார். அதற்குள் போலீசுக்கு தகவல் போய், நீச்சல் குளத்தில் இருந்து ஜாவ் ஷி வெளியே வந்தபோது போலீஸ் நின்றிருந்தது. தற்கொலைக்கு முயன்றதாக அவரை கைது செய்து ஜாமீனில் விட்டனர். இதுபற்றி ஜாவ் ஷி கூறுகையில், ‘‘திறந்தவெளி பால்கனியில் இருந்து அடுத்த பால்கனிக்கு இடைவெளி குறைவாக இருக்கவே விபரீதத்தை உணராமல் பின்னால் கால் வைத்தேன். தற்கொலை செய்து கொள்ள நினைத்ததே இல்லை’’ என்றார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக