ஞாயிறு, 12 டிசம்பர், 2010

ஊடகவியலாளர் மீது தாக்குதல்

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் ஒருவர் நேற்று இரவு தாக்கப்பட்டு படுகாயம் அடைந் துள்ளார். 35 வயதான மாணிக்கபோடி சசிகுமார் என்பவரே தாக்கப்பட்டவராவார். நேற்று இரவு 7.30மணியளவில் இச்சம் பவம் இடம்பெற்றுள்ளது.மட்டக்களப்பு ஜெயந்தி புரத்திலுள்ள அவரின் வீட்டுக்குச் சென்ற மூன்று பேர் கொண்ட ஒரு குழுவினர் அவரை வீட்டிலிரு ந்து வெளியே வருமாறு அழைத்து தாக்கு தல் நடத்தியதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

சசிகுமார் வீட்டிலிருந்து வெளியே வந்த போது தாக்குதலாளிகளில் ஒருவர் தன்னை யார் என்று தெரியவில்லையா எனக் கேட்டார். அதற்கு தெரியவில்லை என சசிகுமார் பதில ளித்தபோது மற்றொருவர் தாக்கத் தொடங்கினார் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.தாக்குதலுக்குள்ளான சசிகுமார் தலை யிலும் கையிலும் தையலிடப்பட்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை யில் சிகிச்சை பெற்று வருகிறார்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல