அப்போது, அவருடைய வீட்டில் இருந்து அவசர போலீஸ் உதவி எண்.999-க்கு போன் வந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், `நீண்ட நேரமாக உறங்கிக்கொண்டிருப்பதாக' மோஸ் கூறினார்.
உடனே, வீட்டுக்குள் சென்று போலீசார் சோதனை செய்தபோது மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏனெனில், தொலைபேசி இருந்த மேஜை மீது ஹோவர்டு மோசின் செல்லப்பூனை நன்றாக தூங்கிக் கொண்டிருந்தது. அதன் கால் பகுதியை தொலைபேசியின் எண்கள் உள்ள பகுதியில் வைத்திருந்தது. தொலைபேசி ரிசீவர் பகுதி விலகி கிடந்தது.
அதன் பிறகு தான், தூக்கத்திலேயே அவசர போலீசுக்கு அந்த பூனை போன் செய்தது தெரியவந்தது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக