வியாழன், 20 ஜனவரி, 2011

ரம்பாவுக்கு பெண் குழந்தை!

தமிழ் சினிமாவின் முன்னாள் கனவுக் கன்னியான நடிகை ரம்பாவுக்கு பெண்குழந்தை பிறந்தது.

நடிகை ரம்பாவுக்கும் கனடாவில் செட்டிலாகிவிட்ட தமிழ் தொழிலதிபர் இந்திரகுமாருக்கும் கடந்த ஆண்டு தி்ருப்பதியில் திருமணம் நடந்தது. அதன் பின்னர் கணவருடன் வசித்து வந்தார் ரம்பா.

இந்த நிலையில் அவர் கர்ப்பமானார். கனடாவில் பிரசவத்தை வைத்துக் கொள்ளத் தீர்மானித்து கணவருடனேயே தங்கியிருந்தார்.

ஜனவரி 14ம் தேதி அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து டொரன்டோவில் உள்ள மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

குழந்தையும் ரம்பாவும் நலமாக இருப்பதாக அவரது கணவர் இந்திர குமார் தெரிவித்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல