மிகவும் பிரபலமான சமூக இணைய வலையமைப்புகளில் ‘பேஸ் புக்குக்கு (Face book) இணை பேஸ் புக்கே தான். இளம் சமூகத்தினர் மட்டுமன்றி சிறுவர் முதல் முதியவர் வரை சகல வயதினருக்குமிடையில் பிரபலமான பேஸ் புக்கின் அங்கத்தவர் தொகை 500 மில்லியன்களை தாண்டிவிட்டது. என்ன நம்ப முடியவில்லையா? இதன் 500 மில்லியனாவதாவது உறுப்பினர் மிக மிக முக்கியமானவராகும். அவர் மார்க் சுகர்பேர்க்.
இவர் வேறு யாருமல்ல. பேஸ் புக் வலையமைப்பின் ஸ்தாபகர். 26 வயது இளைஞரான சுகர்பேர்க் இளம் கோடீஸ்வரர்களில் ஒருவர். 2010 ஆம் ஆண்டில் பேஸ்புக்கின் பெறுமதி 2 பில்லியன் கோடி டொலர்கள்.
பல்கலைக்கழக நாட்களில் விளையாட்டாக ஆரம்பிக்கப்பட்டதே இந்த பேஸ் புக். ஹாவாட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது நண்பர்கள் மூவருடன் இணைந்து ‘கேர்ஸ் மெட்ச்’ (Course match) எனும் கணனி நிகழ்ச்சியொன்றை தயாரித்தார். இதனூடாக மாணவர்கள் கணனியூடாக கலந்துரையாட வாய்ப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் ‘பேஸ் மேஷ்’ (Face mash) எனும் கணனி நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டது.
இதனூடாக ஹாவாட் பல்கலைக்கழகத்தில் உள்ள அழகான தோற்றமுள்ளவரை தெரிவு செய்யும் புகைப்படப் போட்டி நடத்தப்பட்டது. பேஸ் புக்கின் மாதிரியை ஒத்திருந்த இந்த சமூக வலையமைப்பு ஹாவாட் பல்கலைக்கழகத்தில் மிகவும் பிரபலமடைந்தது.
விடுமுறை தினங்களில் மட்டுமே இந்த வலையமைப்பிற்குள் நுழைய முடியும். ஏனென்றால் அதன் பிரபலம் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் வார நாட்களில் அதனை முடியே வைத்திருந்தது.
இவ்வாறு துவங்கிய மார்க் சுகரபேர்கின் முயற்சி படிப்படியாக வளர்ச்சி கண்டு பேஸ் புக்காக மாறியது. தலைசிறந்த கணனி பொறியியலாளரான மார்க் கணித மற்றும் வானியல், புகோளவியல் துறைகளில் சிறந்த மாணவராகவும் பிரஞ்ச், லத்தீன், கிரீஸ் மொழிகளில் தேர்ச்சி பெற்றவராகவும் இருந்ததால் பேஸ் புக் வலையமைப்பை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்துள்ளது.
பேஸ் புக் முழுமையாக நீல நிறத்தில் அமைக்கப்பட்டிருப்பதன் பின்னணியில் சோகக் கதையொன்று புதைந்துள்ளது. எவ்வளவு பிரபலமானவராக இருந்தாலும் சுகர்பேர்கின் வாழ்விலும் சோகம் இருக்கவே செய்கிறது.
இது பலருக்கும் தெரிய நியாயமில்லை. மார்கிற்கு ஏற்பட்டுள்ள மரபணு சார்ந்த குறைபாட்டினால் அவர் பார்வையில் வர்ண குறைபாட்டு நோயினால் பிடிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு சிவப்பு மற்றும் பச்சை நிறங்கள் தெரிவதில்லை அதனால் தான் பேஸ் புக் முழுக்க முழுக்க நீல நிறத்தினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இளம் வயதில் பெரும்சாதனை நிலை நாட்டியுள்ள மார்க்சுகர் பேர்க் 2010 ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக டைம் பத்திரிகையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இது தவிர இவரை மையமாக வைத்து திரைப்படமொன்று கூட தயாராகியுள்ளது.
தகவல் தொழில்நுட்ப உலகில் அதிக அழுத்தம் ஏற்படுத்தக் கூடிய நபராக வெனிடியொ சஞ்சிகை இவரை குறிப்பிட்டுள்ளது. இவரின் புகழைப் போன்றே பேஸ் புக்கின் வளரச்சியும் தொடரும்.

இவர் வேறு யாருமல்ல. பேஸ் புக் வலையமைப்பின் ஸ்தாபகர். 26 வயது இளைஞரான சுகர்பேர்க் இளம் கோடீஸ்வரர்களில் ஒருவர். 2010 ஆம் ஆண்டில் பேஸ்புக்கின் பெறுமதி 2 பில்லியன் கோடி டொலர்கள்.
பல்கலைக்கழக நாட்களில் விளையாட்டாக ஆரம்பிக்கப்பட்டதே இந்த பேஸ் புக். ஹாவாட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது நண்பர்கள் மூவருடன் இணைந்து ‘கேர்ஸ் மெட்ச்’ (Course match) எனும் கணனி நிகழ்ச்சியொன்றை தயாரித்தார். இதனூடாக மாணவர்கள் கணனியூடாக கலந்துரையாட வாய்ப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் ‘பேஸ் மேஷ்’ (Face mash) எனும் கணனி நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டது.
இதனூடாக ஹாவாட் பல்கலைக்கழகத்தில் உள்ள அழகான தோற்றமுள்ளவரை தெரிவு செய்யும் புகைப்படப் போட்டி நடத்தப்பட்டது. பேஸ் புக்கின் மாதிரியை ஒத்திருந்த இந்த சமூக வலையமைப்பு ஹாவாட் பல்கலைக்கழகத்தில் மிகவும் பிரபலமடைந்தது.
விடுமுறை தினங்களில் மட்டுமே இந்த வலையமைப்பிற்குள் நுழைய முடியும். ஏனென்றால் அதன் பிரபலம் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் வார நாட்களில் அதனை முடியே வைத்திருந்தது.
இவ்வாறு துவங்கிய மார்க் சுகரபேர்கின் முயற்சி படிப்படியாக வளர்ச்சி கண்டு பேஸ் புக்காக மாறியது. தலைசிறந்த கணனி பொறியியலாளரான மார்க் கணித மற்றும் வானியல், புகோளவியல் துறைகளில் சிறந்த மாணவராகவும் பிரஞ்ச், லத்தீன், கிரீஸ் மொழிகளில் தேர்ச்சி பெற்றவராகவும் இருந்ததால் பேஸ் புக் வலையமைப்பை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்துள்ளது.
பேஸ் புக் முழுமையாக நீல நிறத்தில் அமைக்கப்பட்டிருப்பதன் பின்னணியில் சோகக் கதையொன்று புதைந்துள்ளது. எவ்வளவு பிரபலமானவராக இருந்தாலும் சுகர்பேர்கின் வாழ்விலும் சோகம் இருக்கவே செய்கிறது.
இது பலருக்கும் தெரிய நியாயமில்லை. மார்கிற்கு ஏற்பட்டுள்ள மரபணு சார்ந்த குறைபாட்டினால் அவர் பார்வையில் வர்ண குறைபாட்டு நோயினால் பிடிக்கப்பட்டுள்ளார். இதனால் அவருக்கு சிவப்பு மற்றும் பச்சை நிறங்கள் தெரிவதில்லை அதனால் தான் பேஸ் புக் முழுக்க முழுக்க நீல நிறத்தினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இளம் வயதில் பெரும்சாதனை நிலை நாட்டியுள்ள மார்க்சுகர் பேர்க் 2010 ஆம் ஆண்டின் சிறந்த மனிதராக டைம் பத்திரிகையினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இது தவிர இவரை மையமாக வைத்து திரைப்படமொன்று கூட தயாராகியுள்ளது.
தகவல் தொழில்நுட்ப உலகில் அதிக அழுத்தம் ஏற்படுத்தக் கூடிய நபராக வெனிடியொ சஞ்சிகை இவரை குறிப்பிட்டுள்ளது. இவரின் புகழைப் போன்றே பேஸ் புக்கின் வளரச்சியும் தொடரும்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக