வியாழன், 2 ஆகஸ்ட், 2012

தமிழில் வெவ்வேறு தாவரங்களின் இலைகளுக்கு வெவ்வேறு பெயர்கள் உண்டு.

வாழை மரம்,அரச மரம்,ஆல மரம் --இலை

பூமியில் வளரும் கொடிகளின் இலை ---பூண்டு

கோரை,அறுகு இவற்றின் இலை ---புல்


நெல்,கேழ்வரகு இவற்றின் இலை --தாள்

மலையைச் சார்ந்த மரங்களின் இலைகள் --தழை

சப்பாத்தி,தாழை இவற்றின் இலைகள் --மடல்

நாணல்,கரும்பு இவற்றின் இலைகள் --தோகை

தென்னை,பனை இவற்றின் இலைகள் --ஓலை

அகத்தி,பசலை இவற்றின் இலைகள் --கீரை


தமிழ் மாதங்கள், கிழமைகளின் தனித் தமிழ்ப் பெயர்கள்

வழக்குச்சொல் தனித்தமிழ்

தை - சுறவம்
மாசி - கும்பம்
பங்குனி - மீனம்
சித்திரை - மேழம்
வைகாசி - விடை
ஆனி - இரட்டை
ஆடி - கடகம்
ஆவணி - மடங்கல்
புரட்டாசி - கன்னி
ஐப்பசி - துலை
கார்த்திகை - நளி
மார்கழி - சிலை

கிழமைகளின் தனித்தமிழ்ப் பெயர்கள்

ஞாயிறு - ஞாயிறு
திங்கள் - திங்கள்
செவ்வாய் - செவ்வாய்
புதன் - அறிவன்
வியாழன் - வியாழன்
வெள்ளி - வெள்ளி
சனி - காரி
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல