பேசிய வார்த்தை உனக்கு எஜமான்
வாக்குறுதி என்பது ஒரு வகையில் கடனே.
பகிர்ந்த துன்பம் பாதியாகிறது.
பகிர்ந்த இன்பம் இரட்டிப்பாகிறது.
செய்யத்தெரிந்தவன் சாதிக்கிறான்.
செய்யத் தெரியாதவன் போதிக்கிறான்.
கோபம் என்பது ஒரு குட்டிப் பைத்தியம்.
வணங்க ஆரம்பிக்கும் போது வளர ஆரம்பிக்கிறோம்.
தவறு கூடுதலாய் இருந்தால் பிடிவாதமும் கூடுதலாய் இருக்கும்.
உங்களைப் பற்றி நீங்கள் எவ்வளவு அதிகம் பேசுகிறீர்களோ
அவ்வளவு அதிகம் பொய் சொல்ல நேரிடும்.
நண்பன் என்பவன் உங்கள் குறைகளை எல்லாம் அறிந்தும்
உங்களை விரும்புபவன்.
ஒரு காரியம் சிரமமானது என்று பயப்படுகிறோம்.
உண்மையில் நாம் பயப்படுவதால் தான் அது சிரமமாகிறது


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக