புதன், 14 ஏப்ரல், 2010

கூட்டுக்கள் குழம்பியதனால் தோற்றுப்போனது முஸ்லிம் சமூகம்

இலங்கையின் அரசியல் வரலாற்றில் இரண்டரை மாத காலத்துக்குள் இரு பெரும் தேர்தல்கள் நடைபெற்ற வரலாற்றுச் சாதனை ஒன்று தேர்தல் திணைக்களத்தினால் பதிவுக்குள்ளாகியுள்ளது.

நடந்துமுடிந்த தேர்தலில் அமைச்சர்கள் பலர் தோல்வியைத் தழுவ, சாதாரணமான கனவிலும் நினைத்துப் பார்த்திராதவர்கள் பாராளுமன்றப் படிக்கட்டை மிதிக்கப் போகின்றார்கள்.

இந்தக் கட்டுரை குறிப்பாக கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் கள நிலைவரங்கள் பற்றியும் ஏனைய மாவட்ட முஸ்லிம்களின் நிலை தொடர்பான மேலோட்டமான கருத்துக்களை மையப்படுத்தி ஒப்புவிக்கப்படுகின்றது.

முஸ்லிம்களின் அரசியல் எனும் போது 1989 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஸ்ரீ.ல.மு.கா. பற்றியும் அதன் வளர்ச்சி, இருப்பு பற்றியெல்லாம் சொல்லாமல் எவரும் எதையும் சொல்லவோ, எழுதவோ முடியாது.

மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.
அஷ்ரப் இரத்தம் சிந்தி, கல்லடி பட்டு வளர்த்த கட்சி, பல உயிர்களின் உரத்தின் மீது வளர்த்த மரக் கட்சி.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் பாராளுமன்றம் சென்றவர்களும், கட்சிக்குக் கிடைத்த தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளைப் பெற்றுச்சென்றவர்களும் இந்தத் தேர்தலில் மக்களால் புறக்கணிக் கப்பட்டிருப்பதுடன் மிக மோசமான தோல்வியையும் சந்தித்துள்ளனர்.

இதன் மூலம் முஸ்லிம் சமூகம் நல்ல தீர்ப்பை வழங்கியிருப்பதுடன், எதிர்காலத்தில் எவராவது துரோகம் இழைக்கக் காத்திருந்தால் அவர்களுக்கு முன்னெச்சக்கைச் செய்தியாகவும் கூறி உள்ளனர்.

முஸ்லிம் அரசியல்வாதிகள், போஸ்டர்களில் லேபல்களாக முகம் மலர்ந்து சிரித்துக்கொண்டிருந்தாலும், பின்னால் ஆளுக்காள் முதுகில் குத்திக் கொண்டிருந்ததை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிர்ந்த ஏனைய கட்சிக ளில் போட்டியிட்ட அபேட்சகர்களிடையே காணக்கூடியதாக இருந்தது. அத்துடன், அமைக்கப்பட்ட கூட்டுக்களுக்குத் தெயப்பட்டவர்கள் தொடர்பாக வாக்காளர்கள் பல்வேறு கருத்துக்களைக் கொண்டிருந்தனர். அதில் ஒன்று, திகாமடுல்லயில் அமைச்சர்களான பேரியல் அஷ்ரப், அதாவுல்லா, நௌஷாட் (முன்னாள் எம். பி.) ஆகியோர் ஒன்றிணைந்திருந்தால் திகாமடுல்ல முடிவு 1994ஆம் ஆண்டின் தேர்தல் முடிவாக இருந்திருக்கும்.

ஐ.ம.சு.கூ. அமைப்பில் ஐந்து முஸ்லிம்கள் இரு அணிகளாகப் பிரிந்தமை வரலாற்றுத் தவறு என்பதை காலம் சொல்லும்.

1989 ஆம் ஆண்டுக்கு முன்னர் அம்பாறை மாவட்டத்தில் மூன்று ஸ்லிம்களும் தலா ஒரு தமிழரும் ஒரு சிங்களவரும் பாராளுமன்றம் சென்றனர். (அம்பாறை கல்முனை சம்மாந்துறை பொத்துவில் தொகுதிகளிலிருந்து)

விருப்பு வாக்கு முறையின்கீழ் நடத்தப்பட்ட 1989 இல் 4 சிங்களவர், (ஐ.தே.க. 3, சு.கட்சி 01) பாராளுமன்றம் செல்ல எம்.எச்.எம். அஷ்ரப் மாத்திரம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினராகச் சென்றார். பின்னர் 1994 முஸ்லிம் பிரதி நிதித்துவம் இரண்டாகி 2000 ஆம் ஆண்டில் தலைவர் அஷ்ரப் ஐ.ம.சு. கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்டதையடுத்து மூன்று முஸ்லிம் என்ற நிலை உருவாக்கப்பட்டது.
அத்துடன் ,தேசிய ஐக்கிய முன்னணியின் ஆதரவாளரான விமலவீர திஸாநாயக்கவும் தெரிவுசெய்யப்பட்டார்.

நடந்து முடிந்த தேர்தலில் ஐ.ம.சு.கூட்டமைப்பில் போட்டியிட்ட 3 சிங்களவர்களும் ஒரு முஸ்லிமாக அமைச்சர் அதாவுல்லாவும் வெற்றி பெற அக்கட்சியில் போட்டியிட்ட 10 வருட பாராளுமன்ற அனுபவசாலியும் முதல் முஸ்லிம் பெண் அமைச்சருமான பேரியல் அஷ்ரப் உட்பட ன்னாள் எம்.பி., ஏ.எம். ம்.நௌஷாட், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீர், முன்னாள் அதிபர் ஏ.எச்.ஏ.பஷீர் ஆகியோர் தோல்வி அடைந்துள்ளனர்.

ஒரு காலத்தில் முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. அப்துல் மஜீதுக்கும், ஏ.ஆர்.எம். மன்சூர், எம்.ஐ. உது மா லெப்பைக்கும் வசைமாரி பொழிந்தவர்கள் இப்போது அவர்களே அதே தவறைச் செய்து விட்டு தன்பாட்டில் உள்ளனர்.

ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை கடந்த எட்டுவருட காலமாக அழிக்க முற்பட்டவர்கள் எவராலும் அக்கட்சியின் அபேட்சகர்கள் பெறுகின்ற வாக்குகளை மாற்றுக் கட்சியினரால் நெருங்கடியாத நிலை கிழக்கில் கா ணப்படுகின்றது. எந்தவிதமான அமைச்சுப் பதவிகளும் அதிகாரம் இல்லாத நிலையில் அவர்கள் இம்முறையும் வெற்றிபெற்றுள்ளமைக்கு பின்வரும் பட்டியல்கள் முலம் அறிந்து கொள்ளலாம். தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாவின் வாக்கு வங்கியில் இம்றை 3, 130 வாக்குகள் குறைந்துள்ளன. அத்துடன், கடந்த 3 தேர்தல்களிலும் அதாவுல்லா பெற்ற மொத்த வாக்குகளில் வரும் இலக்கங்களில் முன்னும் பின்னும் 3 ஆம் இலக்கம் வந்திருப்பதும் விசேட அம்சமாகும். அமைச்சர் பேரியல் அஷ்ரப்புக்கு இம்முறை கிடைத்த வாக்குகள் யாருமே எதிர்பார்க்காத விடயம். கடந்த தேர்தலின் போது சுமார் 50 வீதமான வாக்குகள் சிங்கள வாக்காளர்க ளுடையதாக இருந்தது. இம்முறை சிங்கள மக்களில் பெரும்பாலானவர்கள் எடுத்த தீர்மானம் காரணமாக அவரது சிங்கள வாக்கு வங்கு சரிந்ததனால் தோல்வியடைய வேண்டி ஏற்பட்டது.

அமைச்சர் பேரியலின் தோல்வி இம்மாவட்ட முஸ்லிம்களுக்கு பேரிழப்பாகும். சுனாமிக்குப் பின்னரான வீடமைப்பு நடவடிக்கைகளில் சகல சமூகத்தவருக்கும் தம்மால் இயன்ற அளவு சேவையைச் செய்தவர்.

குறிப்பு: முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் 2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் நேரடியாகப் பங்குபற்றவில்லை. மர்ஹும் எம். எச்.எம். அஷ்ரப்பின் மரணத்தைத் தொடர்ந்தே அவர் அரசியலுக்கு வந்தவர். அந்தத் தேர்தலில் அளிக்கப்பட்ட விருப்புவாக்கு ள் மர்ஹும் அஷ்ரப்பின் விருப்பு வாக்கு ளாகும்.

அமைச்சர் அதாவுல்லா, முன்னாள் அமைச்சர் பேரியல் ஆகியோன் அதிகார பலத்துக்கு முன்னால் முஸ்லிம் காங்கிரஸ் அபேட்சகர்கள் பெருமளவு வாக்குகளைப் பெற்றிருப்பது முஸ்லிம்கள் இன்னும் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்திருப்பதைக் காட்டுகின்றது.

முன்னாள், இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் எச். எம். எம். ஹரிஸின் வாக்கு வங்கியைப் பார்ப்போமானால், ஹரிஸ் மு.காங்கிரஸை விட்டு வெளியேறி 2004 இல் ஐ.ம.சு.கூ. களில் போட்டியிட்ட போதும் அவரால் வெற்றிபெற முடியவில்லை. ஆனால், இம்முறை . காங்கிரஸின் சார்பாகப் போட்டியிட்டதன் காரணமாக (பதவி, பட்டம், அதிகாரம் எதுவுமின்றி) அமைச்சர் அதாவுல்லா பெற்ற விருப்புவாக்கைவிட 8,209 விருப்பு வாக்கு களை அதிகமாகவும், அமைச்சர் பேரியல் அஷ்ரப்பின் வாக்குகளை விட 14,087 வாக்குகளையும் விருப்புவாக்குகளாகப் பெற்றிருப்பதிலிருந்து முஸ்லிம் காங்கிரஸின் சக்தியை அறிந்து கொள்ளலாம்.

இதேவேளை, மற்றொரு அபேட்சகரான முன்னாள், இந்நாள் எம்.பி. பைஸல் காசிம் 2004 ஆம் ஆண்டில் 20,724 வாக்குகளையும், 2010 ஆம் ஆண்டு தேர்தலில் 41,852 வாக்குகளையும் பெற்றதுடன் மக்கள் செல்வாக்கில் 50 வீத முன்னேற்ற விருப்புவாக்குகளைப் பெற்றுள்ளார்.

மேலும் சம்மாந்துறை கிராமத்தில்தான் பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் காணப்பட்ட கிராமம். இங்கு ஸ்ரீ.ல.மு.கா.வின் மூன்றாவது அபேட்சகர், பிரதேச சபைத் தவிசாளர் எம். ஐ.
மன்சூர் 39,579 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். முன்னாள் எம்.பி.ஏ.எம்.எம். நௌஷாட்டுக்கு 27,039 வாக்குகளும் தேசிய காங்கிரஸ் அபேட்சகர் எம்.எஸ்.ஏ. மீர் 22,208 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் அபரிதமான பல சேவைகளைச் செய்த அமைச்சர் அமீர் அலி, ஐ.ம.சு. கூட்டமைப்பில் போட்டியிட்டுத் தோல்வி அடைய முன்னாள் மாகாண அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா, வெற்றி பெற்ற அதே வேளை மட்டக்களப்பின் வட பகுதியிலிருந்து ஸ்ரீ.ல.மு. கா. வின் தவிசாளர் வெற்றிபெற்றுள்ளார்.

திருமலை மாவட்டத்தில் எம். எஸ். தௌபீக் முன்னாள் பா.உ. இந்நாள் மாகாண சபை உறுப்பினர் வெற்றி பெற்றுள்ளதாக உத்தியோகப் பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கும் அதேவேளை முன்னாள் அமைச்சர் நஜீப் ஏ.மஜீட் தோல்வி அடைந்துள்ளார்.

அம்பாறை திகாமடுல்ல மாவட்டத்தில் நடந்த கதிதான் நஜீப் ஏ. மஜீத்தின் தோல்விக்கும் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவத்துக்கும் ஏற்பட்ட பாதிப்பாகும். திருகோணமலை, மூதூர், சேருவில ஆகிய மூன்று தொகு திகளிலிருந்து ஐ.ம.சு.கூட்டமைப்பில் போட்டியிட்ட தேச நிர்மாண அமைச்சர் புஞ்சி நிலம, முன்னாள் பா.உ. குணவர்த்தன ஆகிய இருவரும் வெற்றி பெற சட்டத்தரணி எம்.சீ.
சபறுள்ளா, மோட்டார் போக்குவரத்து திணைக்கள முன்னாள் உதவி ஆணையாளர் எம். ஏ.எம்.நியாஸ் ஆகியோர் பெற்ற விருப்பு வாக்குகள் நஜீப் ஏ மஜீதின் தோல்விக்கு வழிவகுத்துள்ளனவா என்ற கேள்வி எழாமலில்லை.

தேசிய காங்கிரஸின் திருமலை மாவட்ட வியூகம் பிழைத்துப்போய் விட்டது. இங்கு ஒருவரை நிறுத்தி இருக்கலாம். அல்லது இவர்கள் இருவருக்கும் பதிலாக கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் பாயிஸ் நிறுத்தப்பட்டிருக்கலாம் என்பது அங்குள்ள மக்களின் அபிலாஷை.

வன்னி மாவட்டத்தில் இம்முறை மூன்று ஸ்லிம்கள் வெற்றிபெற்றிருப்பது அதிசயிக்கத்தக்கதாக இருப்பினும் அல்லல்படும் தமிழ் சமூகம் இன்னும் தமது இருப்புக்களை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்பதும், தமது உரிமைகளைப் பெறமுடியாது சக்தியற்றிருப்பதும் கவலைக்குரிய விடயம்.

முன்னாள் பிரதியமைச்சர்களான புத்தளம் கே. ஏ. பாயிஸ், எஸ். நிஜாதீன் (கேகாலை), அம்பாந்தோட்டையில் ஹுசைன் பைலா ஆகிய மூவரும் ஸ்ரீ.ல.மு.கா.வின் சிபாரிசின்பேரில் ஐ. தே.க. தேசியப் பட்டியலில் இடம்பிடித்து ஐ.ம. சு.கூ.இல் இணைந்தவர்கள். இவர்களும் இம்றை தோல்வி அடைந்துள்ளனர்.

இன்று எந்த மாவட்டத்தில் போட்டியிட்டாலும் வெற்றிபெறக்கூடிய தலைவராக ஸ்ரீ.ல.மு. கா. தலைவர் ரவூப் ஹக்கீம் கண்டியில் ஐ. தே.க. வில் போட்டியிட்டு முதலிடத்தில் உள்ளார் என்று உத்தியோகப் பற்றற்ற அறிக்கைகள் கூறுகின்றன.

2004ஆம் ஆண்டில் திகாமடுல்ல மாவட்டத்தில் ஸ்ரீ.ல.மு. கா. சார்பாக 68, 627 வாக்குகளைப் பெற்றதுடன் 2001 இல் கண்டி மாவட்டத்தில் ஐ. தே.க. பட்டியலில் போட்டியிட்டு 71, 094 வாக்குகளைப் பெற்றவர். 2000ஆம் ஆண்டில் தேசிய ஐக்கிய முன்னணியில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு 32,023 வாக்குகளைப் பெற்றவர். இது தவிர, கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் திருமலை மாவட்டத்தில் போட்டி யிட்டு அதிகூடிய விருப்புவாக்குகளைப் பெற்ற ஒருவராகவும் இவர் திகழ்கின்றõர்.

மு. காங்கிரஸ் தலைவரது வியூகத்தின்படி இம்றை 6 பேர் தேர்தல் மூலம் மூவர் தேசிய பட்டியல் மூலமாக மொத்தம் ஒன்பது பேர் பாராளுமன்றம் செல்லவிருக்கின்றனர். கடந்த 2004 ஆம் ஆண்டு தேர்தலின் போது 4 பேர் மட்டுமே தேர்தல் மூலம் தெரிவாகினர் என்பது கவனிக்கத்தக்கது.

இவையெல்லாம் இவ்வாறிருந்த போதிலும் கொழும்பு மாவட்டத்தில் ஐ.தே.க. மூன்று முஸ்லிம்களையும் களம் இறக்கியமை தவறான முடிவாகும். அங்கு இருவர் களம் இறங்கியிருப்பின் நிச்சயமாக இருவருமே வெற்றிக்கான விருப்பு வாக்கைப் பெற்றிருப்பர்.

தமக்குள்ளே ஒற்றுமைப்படாதவர்கள் சமூகம் ஒற்றுமையாக வாக்களிக்கவில்லை என்று கூறுவதில் என்ன நியாயம் உள்ளது? இனிமே லாவது இவர்கள் ஒற்றுமைப்படுவார்களா?

எம்.ஐ. அஹமட் அலி றஜாய்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல