அதன் பின்னர் சினேகா பேசுகையில், திருநங்கைகளுக்கு ஆதரவு குரல் கொடுத்தார். அவர் கூறுகையில், “எனக்கு திருநங்கைகளைப் பிடிக்கும். நான் மும்பையில் பிறந்தவள். நான் சிறுமியாக இருந்தபோது என் அம்மா, திருநங்கைகளை அழைத்து திருஷ்டி சுற்றிப் போடுவார்.
அவர்களை அழைத்து வந்து உபசரிப்பார்கள். குழந்தைகள் பிறந்தால் திருநங்கைகளை அழைத்து வந்து ஆசி வாங்குவார்கள். திருநங்கைகள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை. அவர்களது தன்னம்பிக்கை எனக்குப் பிடிக்கும். சமுதாயத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் தரப்பட வேண்டும். அவர்களை நாம் கேலி பேசாமல் ஊக்கப்படுத்திட வேண்டும்” என்றார். சினேகாவின் இந்த பேச்சுக்கு திருநங்கைகள் பெரும் வரவேற்பு கொடுத்தனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக