திங்கள், 13 செப்டம்பர், 2010

55 வேறுபட்ட தாய்மாருக்கு பிறந்த 55 பிள்ளைகளுக்கு நானே தந்தை

55 வேறுபட்ட தாய்மார் மூலம் 55 பிள்ளைகளுக்கு தந்தையாகியுள்ளதாக பதிவுசெய்து கொண்ட நபரொருவரை பிரான்ஸ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
போலியான தகவல்களை வழங்கி வெளிநாட்டு சட்டவிரோத குடியேற்றவாசிகள் வதிவிட உரிமை வழங்க உதவும் வகையில் பாரிஸை சேர்ந்த மேற்படி நபர் (54 வயது) மோசடி வேலையில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ஆபிரிக்க வம்சாவளியான இந்த நபரின் பாரிஸிலுள்ள இரண்டு அறைகளைக் கொண்ட வீட்டில் பொலிஸார் திடீர் சோதனை நடத்தியபோது, 50 க்கு மேற்பட்டவர்களின் வதிவிடமாக மேற்படி வீடு பதிவு செய்யப்பட்டிருந்தமையை வெளிப்படுத்தும் ஆவணங்கள் மீட்கப்பட்டன.

இந் நபர் மேற்படி தாய்மார்களுக்கான வருடாந்த அரசாங்க கொடுப்பனவாக 1.27 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான பணத்தை பெறும் முகமாக இந்த மோசடியில் இறங்கியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

தமது குழந்தைக்கு இந்நபரே தந்தையென உரிமை கோரிய 42 பெண்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

தான் அப்பெண்களை இரவு விடுதிகளில் சந்தித்ததாகவும் அவர்களின் சொந்த நாடுகளுக்கு அடிக்கடி விஜயம் செய்து வருவதாகவும் அந்நபர் கூறினார்.

அப் பெண்களில் பலர் ஆபிரிக்க நாடுகளான செனகல், கமரூன் மற்றும் மாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல