கென்டக்கியிலுள்ள ஜக்ஸன் எனும் இடத்தில் வசிக்கும் ஸ்டான்லி நீஸ் ( Stanley Neace 47 வயது) என்ற இந்த நபர், சம்பவ தினம் காலை உணவின் போது தனக்கு வழங்கப்பட்ட முட்டைகள் சூடாக இல்லை என குறிப்பிட்டு தனது மனைவியுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது சினத்தில் தன்னை மறந்த ஸ்டான்லி நீஸ், துப்பாக்கியை எடுத்து சரமாயாக சுட ஆரம்பித்தார்.
இந்நிலையில் தனது வசிப்பிடத்திலிருந்து அருகிலுள்ள வசிப்பிடமொன்றுக்கு தப்பி யோடிய தனது மனைவி சண்ட்ராவை (54 வயது) துரத்திச் சென்ற ஸ்டான்லி நீஸ் சுட்டுக் கொன்றுள்ளார்.
இந்த சம்பவத்தில் ஸ்டான்லி நீஸின் மகளான சண்ட்ரா ஸ்ரோங் (28 வயது), அயலவர்களான டெனிஸ் ரேர்னர் (31 வயது), தெரேஸா புகத் (30 வயது), தம்மிகில் போர்ன் (40 வயது) ஆகியோர் பலியாகியுள்ளனர்.
தெரேஸா புகத்தை சுட்டுக் கொன்ற ஸ்டான்லி நீஸ், அவரது 7 வயது மகளையும் சுட முயன்றதாகவும் இந்நிலையில் அச்சிறுமி தன்னைச் சுட வேண்டாமென கெஞ்சவும் அவரை தப்பிச் செல்ல அவர் அனுமதித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக