ஞாயிறு, 14 நவம்பர், 2010

72 வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண் (படங்கள் இணைப்பு)

ரோமேனியா நாட்டை சேர்ந்த 72 வயதான அட்ரியானா இலியெஸ்கு தலநகர் புக்காரெஸ்ட்டில் வசித்து வருகிறார். இவர் ஒரு எழுத்தாளரும், புக்காரெஸ்ட் பல்கலைக்கழகத்தில் பகுதி நேர விரிவுரையாளாருமாவார். கடந்த 2005 ஜனவரியில் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அப்போது அவரின் வயது 66 ஆகும். அதன்மூலம், உலகிலேயே அதிக வயதில் குழந்தை பெற்றவர் என்ற சாதனை படைத்தார்.

எலிஸா என்று பெயரிட்டுள்ள அந்த குழந்தைக்கு 5 வயதாகும் நிலையில், மீண்டும் குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் உள்ளதாக கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், ‘‘மருத்துவரீதியாக இது சாத்தியம். நான் முழு ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். 70க்கு பிறகும் குழந்தை பெற முடியும் என இங்கிலாந்து ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, மீண்டும் ஒரு முயற்சிக்கு தயாராக இருக்கிறேன். எனினும், எலிசா மீதுள்ள ஆசையால், அதுபற்றி அவசரப்படவில்லை. நிதானமாக யோசித்து வருகிறேன்.

நான் எப்போதும் 27 வயது பெண்ணைப் போன்றே எனக்குள் உணர்கிறேன், சில வேலைகளில் சிறிது களைப்பாக இருந்தால் ஒரு 37 வயது பெண் போன்ற உணர்வுதான் எனக்குள் ஏற்படுகின்றது. நான் கண்ணாடி பார்ப்பதில்லை. கண்ணாடி பெண்களுக்கு ஒவ்வாத ஒரு பொருள் ஆகும்’’ என்றார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல