அப்படியிருந்தும் ஏகப்பட்ட பில்டப்புகளோடு அழைத்தவர் முதல் வரிசையில் உட்கார வைக்காவிட்டால் எப்படியிருக்கும்? அப்படிதான் இருந்தது சோனியாவுக்கு. முதல் வரிசையை விட்டுவிட்டு பின் வரிசையில் உட்கார வைத்து விட்டார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். கோபித்துக் கொண்டாரா, அல்லது சங்கோஜமா தெரியவில்லை. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே, நைசாக கிளம்பிவிட்டார் சோனியா.
இப்போதெல்லாம் அவரது மனம் முக்கியத்துவம் தேடி அலைய ஆரம்பித்திருக்கிறது. அதன் விளைவாக அதிக சம்பளத்துடன் கிடைத்த டிவி சீரியல்களை கூட வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம். மீண்டும் இதே சினிமாவில் வெற்றிப்படி ஏற வேண்டும் என்பதுதான் அவரது லட்சியம், விருப்பம், கனவு, எல்லாமே.
கனவிழந்த கண்களுக்கு கலர் பூசவென்றே ஒருவர் இருக்கிறாரே, அவர் நடித்துக் கொண்டிருக்கும் வானம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சோனியா அகர்வால்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக