ஞாயிறு, 14 நவம்பர், 2010

தீபா மேதாவின் அடுத்த படம் இலங்கையில்

இந்தியாவின் பெண் திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான தீபா மேத்தா உலகப் பிரசித்தி பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான சல்மான் ருஸ்லி எழுதிய மிட் நைற்ஸ் சில்ரன் என்கிற நாவலை அடிப்படையாக வைத்து அடுத்த ஜனவரி மாதம் இலங்கையில் திரைப்பட பிடிப்பை ஆரம்பிக்கின்றார்.

இவ்வாங்கில திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளனர். தீபா மேத்தா நோபால் பரிசு பெறுகின்றமைக்கான முன்மொழியப்பட்ட ஒரு இயக்குனர்.

மிட் நைற்ஸ் சில்ரன் நாவலை அடிப்படையாக கொண்டு ஐந்து அங்கங்கள் கொண்ட தொலைக்காட்சி நாடகம் ஒன்றை இலங்கையில் படம்பிடிக்க பி.பி.சி செய்தி நிறுவனம் 1990 களில் முயன்றது.

ஆனால் இலங்கையில் உள்ள முஸ்லிம் சமுதாயத்தின் பலத்த எதிர்ப்புக் காரணமாக படப்பிடிப்புக்கான அனுமதி இலங்கை அரசினால் ரத்துச் செய்யப்பட்டது. பி.பி.சியும் பின்வாங்கிக் கொண்டது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல