சனி, 27 நவம்பர், 2010

புஷ் எழுதிய புத்தகம் விற்பனையில் சாதனை

ஒபாமாவுக்கு முன்பு எட்டு ஆண்டுகளாக அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜோர்ஜ் புஷ் தற்போது புத்தகம் எழுதும் பணியிலும் இறங்கிவிட்டார்.

‘டிசிசன் பொய்ண்ட்’ என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள புத்தகத்தை அமெரிக்காவைச் சேர்ந்த கிரவுன் பதிப்பகம் கடந்த 9ம் திகதி வெளியிட்டது.

தற்போது, அந்த புத்தகம் விற்பனையில் சாததை படைத்து வருகிறது. இரண்டு வாரத்துக்குள் 11 இலட்சம் புத்தகங்கள் விற்றுவிட்டன. இது தவிர ஒரு இலட்சத்து 35 ஆயிரம் இணைய புத்தக பிரதிகளும் விற்பனையாகி உள்ளன.

இதனால், மிகச் சிறந்த எழுத்தாளர்களாக விளங்கும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகளின் பட்டியலில் ஜோர்ஜ் புஷ்ஷூம் சேர்ந்துவிட்டார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல