சனி, 18 டிசம்பர், 2010

படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த 5 இலங்கையர் கைது!

சென்னையில் இருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த 5 இலங்கைத் தமிழர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.ஈச்சம்பாக்கம் அனுமன் காலனி அருகே இலங்கை தமிழர்கள் 10 பேர் ஒரு வேனை நிறுத்திவிட்டு பேசிக்கொண்டிருந்தனர். அவர்களுடைய நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த அப்பகுதியினர் காவற்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து காவற்துறை அங்கு சென்றும் அவர்களில் 5 பேர் தப்பிவிட்டனர். ராஜா, ராஜீவ் காந்தன், உதயகுமார், ரோஜ்மாரியா, சுரேஷ்குமார் ஆகிய 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள அகதிகள் முகாம்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் தலா 80 ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு தம்மை ஒரு படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதாக கூறியதாகவும், அதற்கிணங்க தாம் அங்கு வந்ததாகவும் காவற்துறையினரிடம் கூறியுள்ளனர். பிரகாஷ் இவர்கள் அனைவரையும் கோயம்பேட்டுக்கு வருமாறு அங்கு அவர்களிடம் இருந்து பணம் பெற்றக்கொண்டு வேன் மூலம் ஈஞ்சம்பாக்கத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதுபோன்று பலமுறை இலங்கை தமிழ் அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக பிரகாஷ் தங்களிடம் கூறியுள்ளதாக, கைதுசெய்யப்பட்டவர்கள் காவற்துறையினரிடம் கூறியுள்ளனர். இவர்களை கைதுசெய்த நீலாங்கரை காவற்துறையினர், அவர்களை கியூ பிரிவு காவற்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் தொடர்ந்து இலங்கை அதிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் தப்பியோடிய 5 பேரை கைதுசெய்யயும் இவர்களை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதாக பணம் பறித்த பிரகாஷையும் கைது செய்ய காவற்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல