புதன், 2 பிப்ரவரி, 2011

போர் முடிந்தாலும் மஹிந்த சமாதானத்தைக் கொண்டு வருவார் என்பது தூரத்து விடயம்: புலிகளின் தலைவர்களாக சிலர் முயற்சி - விக்கிலீக்ஸ்!

முள்ளிவாய்க்கால் இறுதி நேரத்தில் போர் முடிந்துவிட்டதாக அரசாங்கம் அறிவித்தது. அதனைத்தொடர்ந்து புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் இறந்துவிட்டதாக கூறியது. இவற்றின் தாக்கங்கள் இந்திய பாகிஸ்தான் ஊடகவியலாளர்களிடம் எவ்வாறு இருந்தது என்பதனை டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்காவிற்கு கேபிள் மூலம் தெரிவித்திருந்தது.

அதில் மே மாதம் 21 ஆம் திகதி 2009 இல் அனுப்பபட்ட செய்திகளின் படி போர் பெரும்பாலும் முடிந்துவிட்டது ஆனால் மஹிந்த ராஜபக்ஷ சமாதானத்தை கொண்டு வருவவார் என்பது இன்னமும் தொலைவிலேயே உள்ளது.

புலிகள் அழிந்துவிட்டார்கள் என்றாலும் தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படவில்லை. தமிழ் மக்களின் பிரச்சினை நியாயமானது சட்ட ரீதியானது அதற்காக புலிகளின் ஆயுத போராட்டத்தினை முழுமையாக நியாயமானது என கூற முடியாது. புலிகளின் தலைவர் இறந்ததாக அரசாங்கம் அறிவித்த பின்னர் வேறு சிலர் தம்மை தலைவராக்கக் கற்பனை செய்து கொண்டு இருக்கின்றார்கள். மேற்கண்டவாறே விக்கிலீக்சில் குறிப்பிடபப்ட்டுள்ளது
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல