திங்கள், 8 நவம்பர், 2010

விவாகரத்து ஆன பெண்கள் கலந்து கொள்ள அனுமதி

அழகிப் போட்டியில் இதுவரை திருமணம் ஆகாத பெண்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டு வந்தனர். இப்போதுதான் முதல் முறையாக இங்கிலாந்து நாட்டில் தேசிய அளவில் நடக்கும் அழகிப் போட்டிகளில் திருமணம் ஆகாத குழந்தை பெற்ற பெண்களும், விவாகரத்து ஆன பெண்களும் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அழகிப்போட்டி தொடங்கிய 65 ஆண்டுகளில் திருமணம் ஆகாத தாய்மார்கள், விவாகரத்து ஆன பெண்கள் கலந்து கொள்ள அனுமதித்து இருப்பது இதுதான் முறை ஆகும்.

இதைத்தொடர்ந்து இந்த ஆண்டு நடக்கும் போட்டியில் 5 பெண்கள் திருமணம் ஆகாத குழந்தை பெற்றவர்கள் ஆவார்கள்.

1974-ம் ஆண்டு நடந்த அழகிப் போட்டியில் `வெல்ஷ்' இனத்தை சேர்ந்த ஹெலன் மோர்கன் இங்கிலாந்து அழகியாக தேர்ந்து எடுக்கப்பட்டார். பிறகுதான், அவர் 18 மாத ஆண் குழந்தைக்கு தாயார் என்பது தெரியவந்தது.

அனைத்து வயது பெண்களுக்கும் சமவாய்ப்பு அளிப்பதற்காக `பிகினி' உடை அணிந்து போட்டியில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதற்கு பதிலாக ஒரே நீளத்துணியிலான நீச்சல் உடை அணிந்து போட்டியில் கலந்து கொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டு உள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல