தமிழ் திரைப்படங்களான மன்மதன், அந்நியன் போன்ற படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியவர் இந்தி நடிகை யானா குப்தா. இவர் மும்பையில் சமீபத்தில் நடைபெற்ற குழந்தைகள் அறக்கட்டளை பொதுநிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது உள்ளாடை அணியாமல் கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்த நிலையில் அவரை புகைப்படக்காரர்கள் படம் எடுத்தனர்.
அந்தப் படங்கள் செய்தித்தாள் மற்றும் இணைய தளங்களில் வெளியானது. இதுகுறித்து சோசியல் நெட் ஒர்க்கில் கருத்து தெரிவித்த யானா, ‘இதுவரை என்னை அயிட்டம் கேர்ள் (கவர்ச்சி நடனம் ஆடுபவர்) என்று கூறினார்கள். இனிமேல் நோ பேன்ட்டி கேர்ள் (உள்ளாடை அணியாத நடிகை) என்று அழைப்பார்கள்’ என குறிப்பிட்டிருந்தார். இதனால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் லக்னோவில் உள்ள தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சமூக சேவகர் ரிஸ்வான் அஹமத் என்பவர் யானா குப்தா மீது வழக்கு தொடர்ந்தார். அதில், ‘குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் உள்ளாடை அணியாமல் யானா குப்தா பங்கேற்றது கீழ்த்தரமான செயல். விளம்பரத்துக்காக இப்படியொரு செயலில் ஈடுபட்டுள்ளார். யானா குப்தா, புகைப்படக்காரர் மற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த சுசீலா நிராலி ஆகியோருக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும்’ என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக