நாடு கடத்தப்படுவதை தடுக்க அந்நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவரை போலி திருமணம் செய்ய முயன்ற நைஜீரியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் வசமாக அதிகாரிகளிடம் சிக்கிக் கொண்ட சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
லூயிஸ் எஸெனி என்ற மேற்படி மாணவர் பிறிதொரு நபர் மூலம் கர்ப்பமடைந்த எமிலியா ஜினோவா (22 வயது) என்ற பெண்ணுக்கு 3000 ஸ்ரேலிங் பவுணை கட்டணமாக செலுத்தி அவருடனான போலித் திருமணத்துக்கு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.
தென் வேல்ஸில் பொன்ரிபிறைட் எனும் இடத்திலுள்ள திருமணப் பதிவு அலுவலகத்தில் திருமணம் செய்ய தயாரான வேளை லூயிஸ் தம்மை உண்மையிலேயே காதல் ஜோடி என காண்பிக்க எமிலியாவின் முழங்கால்களில் கையை வைத்துள்ளார்.
இதன்போது எமிலா அதிர்ச்சியுடன் விலகவும் சந்தேகம் கொண்ட திருமண பதிவாளர் இது தொடர்பில் பிரித்தானிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது குறிப்பிட்ட ஜோடி போலியான திருமண பந்தத்தில் இணையவிருந்தமை கண்டறியப்பட்டது.
தொடர்ந்து எமிலியாவுக்கு 18 மாத சிறைத்தண்டனையும் லூயிஸுக்கு 21 மாத சிறைத் தண்டனையும் விதிக்க ப்பட்டுள்ளன. சிறைத்தண்டனை முடிந்ததும் லூயிஸ் தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்ப ப்படவுள்ளார்.

லூயிஸ் எஸெனி என்ற மேற்படி மாணவர் பிறிதொரு நபர் மூலம் கர்ப்பமடைந்த எமிலியா ஜினோவா (22 வயது) என்ற பெண்ணுக்கு 3000 ஸ்ரேலிங் பவுணை கட்டணமாக செலுத்தி அவருடனான போலித் திருமணத்துக்கு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.
தென் வேல்ஸில் பொன்ரிபிறைட் எனும் இடத்திலுள்ள திருமணப் பதிவு அலுவலகத்தில் திருமணம் செய்ய தயாரான வேளை லூயிஸ் தம்மை உண்மையிலேயே காதல் ஜோடி என காண்பிக்க எமிலியாவின் முழங்கால்களில் கையை வைத்துள்ளார்.
இதன்போது எமிலா அதிர்ச்சியுடன் விலகவும் சந்தேகம் கொண்ட திருமண பதிவாளர் இது தொடர்பில் பிரித்தானிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது குறிப்பிட்ட ஜோடி போலியான திருமண பந்தத்தில் இணையவிருந்தமை கண்டறியப்பட்டது.
தொடர்ந்து எமிலியாவுக்கு 18 மாத சிறைத்தண்டனையும் லூயிஸுக்கு 21 மாத சிறைத் தண்டனையும் விதிக்க ப்பட்டுள்ளன. சிறைத்தண்டனை முடிந்ததும் லூயிஸ் தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்ப ப்படவுள்ளார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக