வெள்ளி, 31 ஜூலை, 2015
வியாழன், 30 ஜூலை, 2015
நடிகர் வினுசக்கரவர்த்தி நிலைமை கவலைக்கிடம்- நினைவை முற்றிலும் இழந்தார்
தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர்களில் ஒருவரும் இயக்குனருமான, நடிகர் வினுசக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் இதுவரை சுமார் 1௦௦௦ படங்களுக்கும் மேல் நடித்து, தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை தமிழ் சினிமாவில் உருவாக்கிக் கொண்டவர் வினுசக்கரவர்த்தி.
Labels:
சினிமா
திங்கள், 27 ஜூலை, 2015
சனி, 25 ஜூலை, 2015
படித்ததில்..... வலித்தது.......
தோளில் தன் மகனை தூக்கிக் கொண்டு பேருந்தில் சென்றார் அவர். முகத்தில் ஏனோ ஒரு கவலை. 'டிக்கெட்' என்று நடத்துனர் கேட்ட போது பதில் எதுவும் பேசவில்லை. 'யோவ் எங்கயா போகணும்'னு கண்டக்டர் டென்ஷன் ஆக, நடுங்கும் கைகளில் இருந்த காசினை வெடுக்கென்று பிடுங்கிக்கொண்டு, 'காலங்காத்தால வந்துட்டானுங்க' என்று முணுமுணுத்துக்கொண்டே நகர்ந்தார் கண்டக்டர். ஜன்னல் ஓரத்தில் அமர்திருந்தாலோ என்னவோ காற்றும் தூசியும் கண்ணில் பட்டு கண் கலங்கினார். தோளில் கிடந்த துண்டை எடுத்து கண்களை துடைத்துக்கொண்டு, தொடர்ந்து மௌனமாகவே பயணித்துக் கொண்டிருந்தார். அவருடன் வந்திருந்த மற்றொரு நபர் அவரை இறுக்க பற்றிக்கொண்டிருந்தார். ஏதோவொரு துயரச் சம்பவம் அவர் வாழ்வில் நடந்திருக்கிறது என்று தெரிந்தது.
Labels:
தமிழர்கள்
நீதிபதி இளஞ்செழியன் முன் கர்ப்பிணியாக நின்ற 17 வயதுச் சிறுமி….!
காணாமல் போயிருந்ததாகத் தெரிவிக்கப்பட்ட 17 வயது பெண் நீதிமன்றத்தில் தாலியோடு முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், அவர் ஆறு மாதக் கர்ப்பிணியாகவும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட ஆட்கொணர்வு மனு வழக்கொன்றில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், பெருமைக்குரிய யாழ் மண்ணின் கலாச்சாரம் சீரழிந்து செல்வதாக கவலை வெளியிட்டுள்ளார்.
Labels:
தமிழர்கள்,
யாழ் செய்திகள்,
யாழ்ப்பாணம்
வியாழன், 23 ஜூலை, 2015
புதன், 22 ஜூலை, 2015
திங்கள், 20 ஜூலை, 2015
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முதல் இலங்கையர் மரணம்!
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முதல் இலங்கையர் சிரியாவில் கடந்த வாரம் இடம்பெற்ற வான் வழித் தாக்குதலில் மரணமானார் என சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறு மரணமானவர் 37 வயதான அபூ சுரையா சைலனி (இப்பெயர் அவரின் சொந்தப் பெயரல்ல ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் சேர்ந்த பின்னர் சூடிய பெயராகும்) என்பவராவார்.
Labels:
உலகப்பார்வை,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
ஞாயிறு, 19 ஜூலை, 2015
வெள்ளி, 17 ஜூலை, 2015
வியாழன், 16 ஜூலை, 2015
புதன், 15 ஜூலை, 2015
மைக்கேல் ஜாக்சனை நாங்களே கொலை செய்தோம்: அமெரிக்க அரசின் முன்னாள் ஏஜெண்டு அறிவிப்பு(காணொளி இணைப்பு)
உலக புகழ் பெற்ற பாப் இசை உலகின் அரசனாக விளங்கியவர் மறைந்த மைக்கேல் ஜாக்சன். இவர் கடந்த 2009ம் ஆண்டில் மரணம் அடைந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை மர்மம் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. அவரது மரணத்திற்கு புரபனால் என்ற மருந்தை அதிக அளவில் கொடுத்த குற்றத்திற்காக டாக்டர் கன்ராடு முர்ரே என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
Labels:
உலகப்பார்வை
செவ்வாய், 14 ஜூலை, 2015
மறைந்த இசை மன்னர் எம்.எஸ்.வி-யின் பெர்சனல் பக்கங்கள்
எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்தது கேரளாவில் பாலக்காடு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில். பிறந்த வருடம் 1928 ஜூன் 24.
அன்புக்கு உகந்த மனைவி ஜானகி அம்மாள். கோபி கிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என நான்கு மகன்கள். லதா மோகன், மதுபிரசாத் மோகன், சாந்தி குமார் என மூன்று மகள்கள். ஆனால், யாருக்கும் இசையில் நாட்டம் இல்லை!
அன்புக்கு உகந்த மனைவி ஜானகி அம்மாள். கோபி கிருஷ்ணா, முரளிதரன், பிரகாஷ், அரிதாஸ் என நான்கு மகன்கள். லதா மோகன், மதுபிரசாத் மோகன், சாந்தி குமார் என மூன்று மகள்கள். ஆனால், யாருக்கும் இசையில் நாட்டம் இல்லை!
Labels:
சினிமா
ஞாயிறு, 12 ஜூலை, 2015
வீடுகளை நிர்மாணிக்க சிறுநீரகங்களை விற்கும் நேபாள மக்கள் (படங்கள் இணைப்பு)
நேபாளத்தை கடந்த ஏப்ரல் மாதம் தாக்கிய 7.8 ரிச்டர் அளவான பாரிய பூமியதிர்ச்சியில் சிக்கி பல கிராமங்களிலுள்ள வீடுகள் இடிந்து விழுந்துள்ள நிலையில், மேற்படி பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் தமக்கென புதிதாக வீடொன்றை நிர்மாணிக்கும் முகமாக தமது சிறுநீரகங்களை உடல் உடலுறுப்புகளை கடத்துபவர்களுக்கு விற்றுள்ளமை தொடர்பான அதிர்ச்சிச் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
Labels:
உலகப்பார்வை,
படங்கள்,
வினோதமான செய்திகள்
சனி, 11 ஜூலை, 2015
வெள்ளி, 10 ஜூலை, 2015
அனைவரும் பகிர்ந்து இந்தப் பிஞ்சுக் குழந்தையின் உயிர் காத்திட முன் வாருங்கள்….
பிறந்த 6 மாதத்திலிருந்து இரத்தச் சோகை (தலசியா மேஜர்) என்ற நோயினால் மிகவும் பாதிக்கப்பட்டு தொடர்ந்து பல சிகிச்சைகள் செய்தும் எவ்வித பலனுமின்றி இன்று 5 வயதாகியும் நோயின் தன்மை அதிகமாகி மேற்கொண்டு சிகிச்சை செய்ய எவ்வித வசதியுமின்றி தற்போது உயிருக்காகப் போராடி வரும் இக் குழந்தையின் பூ முகத்தைப் பாருங்கள்..
இக் குழந்தை செய்த பாவம்தான் என்ன ஏழைப் பெற்றோருக்கு மகளாகப் பிறந்ததா.???
இக் குழந்தை செய்த பாவம்தான் என்ன ஏழைப் பெற்றோருக்கு மகளாகப் பிறந்ததா.???
Labels:
உதவி (Please help)
வியாழன், 9 ஜூலை, 2015
முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர் இரட்டை வேடதாரிகளுக்கு முகம் கொடுக்கிறாரா?
நல்லிணக்கத்தை நோக்கிய பாதை
வரும் பொதுத்தேர்தலில் ஒரு முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர் போட்ltte cadrs-1டியிடுவதற்காக வேட்புமனு விண்ணப்பம் சமர்ப்பித்துள்ளது கடந்த வாரம் அரசியல் வட்டாரங்களில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. முன்னாள் எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவரால் வேட்புமனுவுக்கு வேண்டுகோள் விடுக்கப் பட்டது தொடர்பான சமீபத்தைய பிரச்சினை, அவரைப் போன்ற கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளீதரன் மற்றும் பிள்ளையான் என்கிற சிவநேசதுரை சந்திரகாந்தன் போன்றவர்கள் தேசிய அளவிலான தேர்தல்களில் போட்டியிட்டதுடன் முன்னாள் ராஜபக்ஸவின் அரசாங்கத்தில் பதவிகளை வகித்திருப்பதையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
செவ்வாய், 7 ஜூலை, 2015
ஹிட்லருக்கு அனுப்பிய தந்தி ஏலம்..!!
இரண்டாம் உலகப்போர் இறுதி கட்டத்தை எட்டிய போது ஜெர்மனி சர்வாதிகாரியான ஹிட்லருக்கு, நாஜிப்படைகளின் ரகசிய போலீஸ் படையை நிறுவிய ஹெர்மன் கோயரிங் தந்தி ஒன்றை அனுப்பினார். 1945-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந்தேதி அனுப்பப்பட்ட அந்த தந்தியில், நாஜிக்கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்பது தொடர்பாக கோயரிங் அனுமதி கேட்டிருந்தார்.
Labels:
உலகப்பார்வை
முன்னாள் போராளிகளுக்கு சங்கரி அழைப்பு
பாராளுமன்ற தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கு முன்னாள் போராளிகளுக்கு சந்தர்ப்பம் வழங்க தயாராகவுள்ளதாக கட்சியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி தெரிவி த்துள்ளார். முன்னாள் போராளிகள் போட்டியி டுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பில் அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில் அதற்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டுள்ளது.
Labels:
இலங்கை,
தமிழர்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
Indians go to Sri Lanka for the beaches...stay for the kidneys
A surgeon preparing a donated human kidney for transplant
With Indian organ transplantation rules making it near impossible for 'un-related' organ transplant here, Sri Lanka is emerging as the organ transplant hub for BengalureansMoney was not a problem for a patient of her means. But finding a donor match among relatives was an insurmountable challenge. Her MLA-husband couldn't manage to bend the rules either and the doctors in Bengaluru too threw up their hands in despair. Just when it seemed all was lost, a trip to Sri Lanka, along with her driver, gave her a fresh lease of life. She returned with a new kidney!
Labels:
News in English
ஞாயிறு, 5 ஜூலை, 2015
உங்களுக்கு வியாழ மாற்றம் எப்படி அமையும்?
ஜாதக கிரக நிலையில் ஒருவரின் ஆளுமைத்திறனுக்கும் உயர்ந்த ஆய்வு நிலைக்கும், சமூக அந்தஸ்துடைய கெளரவமான வாழ்விற்கும் முக்கிய காரணியாக அமைபவர் பிரகஸ்பதி எனப்படும். குருபகவான். இவர் வருடத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு ராசியாக சஞ்சாரம் செய்பவர். அதன் மூலமாக பன்னிரு ராசிகளுக்கும், பலாபலன்கள் நன்மை, தீமை என அமைவதுண்டு. அந்த வகையில். வாக்கிய பஞ்சாங்க கணிதப்படி நேற்று ஞாயிறு பின்னிரவு 11 மணி 41 நிமிட நேரமளவில் கடகராசியில் இருந்து தனது நட்பு வீடான சிம்மராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். இந்தப் பெயர்ச்சியின் மூலம் நல்ல அதிர்ஷ்டம், சுமாரான பலன், மத்திம பலன் என பலாபலன்கள் ஏற்படும்.
Labels:
ஜாதகம்
மகனைக் காணாது அழுது புலம்பும் சொறிக்கல்முனை ஏழைத்தாயார் - தேடிக்கண்டுபிடித்துத்தருமாறு உருக்கமான வேண்டுகோள் விடுக்கின்றார்
தனது ஒரே மகன் இந்தியா சென்று ஐம்பது நாட்களாகியும் இன்னும் எதுவித தகவலுமில்லாமல் அனலிடைப்பட்ட மெழுகு போல் வெந்து புலம்புகிறார் ஓர் ஏழைத்தாயார்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்திலுள்ள சொறிக்கல்முனைக் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
கணேஷ் கபிலன் எனும் 23வயது இளைஞனே இவ்விதம் காணாமல்போயுள்ளார்.
இச்சம்பவம் அம்பாறை மாவட்டத்திலுள்ள சொறிக்கல்முனைக் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
கணேஷ் கபிலன் எனும் 23வயது இளைஞனே இவ்விதம் காணாமல்போயுள்ளார்.
Labels:
உதவி (Please help),
தமிழர்கள்,
வீரகேசரி
ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் - சரவணா ஸ்டோர்ஸ்
சில நாட்களுக்கு முன்பு சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்தேன். இரவு 9 மணி. அதிகக் கூட்டம் இல்லை. நாள் முழுக்க உழைத்த களைப்புடன், வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்த சிறு புன்னகையுடன் துணிகளை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார் அந்தப் பெண். மெலிந்த தேகம். மிஞ்சிப் போனால் 25 வயது இருக்கலாம்.
‘‘எந்த ஊர் நீங்க?’’
‘‘திருவண்ணாமலை பக்கம்..’’
‘‘எந்த ஊர் நீங்க?’’
‘‘திருவண்ணாமலை பக்கம்..’’
Labels:
இந்தியா,
குற்றம் (Crime),
கேள்வி - பதில்,
தமிழ்நாடு,
தமிழர்கள்,
பித்தலாட்டங்கள்
கடன் கொடுத்தோரைக் கலங்கடிக்கும் கிரேக்கம்
1991ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்திலும் 2001ஆம் ஆண்டில் யூரோ நாணயக் கட்டமைப்பிலும் கிரேக்கம் இணைந்து கொண்டது. தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் 28 நாடுகளும் நாணயக் கட்டமைப்பில் 19 நாடுகளும் இருக்கின்றன. இரண்டிலும் இணையும்போது கிரேக்கம் தனது பொருளாதாரம் தொடர்பான தகவல்களைத் திரித்துக் கூறியிருந்தது என்ற குற்றச்சாட்டும் உண்டு.
Labels:
உலகப்பார்வை,
கட்டுரைகள்,
வீரகேசரி
வயிற்றுப்பசிக்கு விலைபோகும் மாதர்கள்
வந்த புதிதில் எனக்கு இங்குள்ள வேலைகளைச் செய்ய அருவருப்பாகவும் இருந்தது. ஆண்களின் உடலை என் கைகளால் தீண்டும் போது என் கைகள் கூசின. ஆயினும், நாளடைவில் அந்த சூழலுக்கு ஏற்ப இசைவாக்கம் அடைந்துக் கொண்டேன்
''ஈட்டி எட்டின வரை பாயும், பணம் பாதாளம் மட்டும் பாயும்'' என்பார்கள். அந்தவகையில் கடந்த வாரங்களில் 'குற்றம்' பகுதியில் பணத்துக்காக எதையும் செய்யத் துணிந்த பணவெறியர்களை பற்றிப் பார்த்திருந்தோம். ஆனால், இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் தமது அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடாத்தவே பணம் இன்றி வாழ்க்கைச் சுமையால் வாட்டமுற்று இன்னலுடன் வாழ்பவர்கள் பலர். இவர்கள் வறுமையின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி இறுதியில் தனக்கென்று விதிக்கப்பட்ட பண்பாடுகளையும், கலாசாரங்களையும் தகர்த்தெறிந்து, உணர்வுகளுக்கு விலங்கிட்டு தமது அங்கங்களுக்கு ஒரு விலை கொடுக்க ஆரம்பித்து விடுகின்றார்கள்.
''ஈட்டி எட்டின வரை பாயும், பணம் பாதாளம் மட்டும் பாயும்'' என்பார்கள். அந்தவகையில் கடந்த வாரங்களில் 'குற்றம்' பகுதியில் பணத்துக்காக எதையும் செய்யத் துணிந்த பணவெறியர்களை பற்றிப் பார்த்திருந்தோம். ஆனால், இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் தமது அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடாத்தவே பணம் இன்றி வாழ்க்கைச் சுமையால் வாட்டமுற்று இன்னலுடன் வாழ்பவர்கள் பலர். இவர்கள் வறுமையின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி இறுதியில் தனக்கென்று விதிக்கப்பட்ட பண்பாடுகளையும், கலாசாரங்களையும் தகர்த்தெறிந்து, உணர்வுகளுக்கு விலங்கிட்டு தமது அங்கங்களுக்கு ஒரு விலை கொடுக்க ஆரம்பித்து விடுகின்றார்கள்.
Labels:
கட்டுரைகள்,
குற்றம் (Crime),
வீரகேசரி
உளச்சோர்வு – உதவியின்றேல் உயிர்கொல்லும்
“என்ன சோர்ந்துபோய் இருக்கிறாய்”, முகத்தில் ஈ ஆடவில்லை”, “முகம் காய்ஞ்சு போய் இருக்கு” “முன்புபோல் உஷாராக இல்லை”, இதுபோன்ற வசனங்களை நாம் அன்றாட வாழ்வில் எமது உறவினர்கள், நண்பர்கள், மாணவர்கள் போன்றோரை காணும் போது பயன்படுத்துகிறோம். முகம் அதன் தோற்றம் எமது மனதின் பல்வேறு விம்பங்களை எடுத்துக்காட்டுகின்றது. முகத்தில் ஏற்படும் மாற்றங்கள் எமது சிந்தனை, செயல், நடத்தைகளில் வெளிக்காட்டப் படுகின்றன. மேலே குறிப்பிட்ட வசனங்களை உங்களிற்கு நன்றாக தெரிந்த ஒருவரில் பிரயோகிக்க வேண்டி ஏற்பட்டால், இவரிற்கு “உளச்சோர்வு” நோய் இருக்குமோ? என்ற அடுத்த சந்தேகத்தை தீர்க்க உங்களிற்கு இக்கட்டுரை உதவி செய்யும்.
Labels:
கட்டுரைகள்,
பலதும் பத்தும்
ஒரு தொழிற்சங்க ஊழியனின் குமுறல்
மலையக நகரங்களில் ஏதாவது ஓரிடத்தில் நீங்கள் வழுக்கி விழுந்தால் அவ்விடத்தில் நிச்சயம் ஒரு சாராய தவறணை இருக்கும். அல்லது ஒரு தொழிற்சங்க காரியாலயம் இருக்கும். சாராயத் தவறணை, தொழிற்சங்க காரியாலயம் ஆகிய இரண்டுக்கும் இடையில் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. இவை இரண்டுமே தொழிலாளர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடியவை என்றொரு மயக்கம் பரவலாகவே உள்ளது.
Labels:
இலங்கை,
கட்டுரைகள்
பரீட்சையில் வெற்றிபெற மூச்சுப் பிடித்து படிப்பது எப்படி?
ஒருவர் உயிருடன் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துவது அவரது சுவாச ஓட்டமாகும். “மூச்சுப்போனால் எல்லாம் போச்சு" என்பார்கள். “இறுதி மூச்சுவரை இதை நான் மறக்கமாட்டேன்" என்றும் சொல்வார்கள். மூச்சை அடக்கியும் கட்டுப்டுத்தியுமே பெரிய முனிவர்கள், யோகிகள் செயற்கரும் செயல்களைச் செய்துள்ளார்கள். நீண்டகாலம் வாழ்ந்துள்ளார்கள். எமது மூச்சுக்காற்று நாம் உறங்கும்போதும் இயங்கிக்கொண்டே இருக்கின்றது.
Labels:
பலதும் பத்தும்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
















































