யாழ்.குடா நாட்டிலே நேற்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில் இன்றைய தினம் பேராசிரியர்.பாலசுந்தரம் பிள்ளை, சிற்றம்பலம், முன்னாள் யாழ்.மாநகர சபை உறுப்பினர் சி.வி.கே.சிவாஞானம் மற்றும் யாழ் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தின் இணைப்பாளர் பரமநாதன் ஆகியோர் இன்று சாட்சியமளித்துள்ளனர்.
இன்றும் பல நூற்றுக் கணக்கான மக்கள் தமது காணமல் போன பிள்ளைகள் தொடர்பில் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக