வெள்ளி, 31 டிசம்பர், 2010

இலங்கை கடந்து வந்த சவால்களை எவராலும் மறக்க முடியாது

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கை கடந்து வந்த சவால்களை எவராலும் மறக்க முடியாது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பட்ரிசிய ஏ.பூட்டனிஸ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் அவசர உணவு நிவாரண பொதிகளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சரிடம் கையளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு, குடத்தனையில் தபாலக ஊழியர் மீது துப்பாக்கிச் சூடு

வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தின் குடத்தனை கிழக்கில் வீடு புகுந்து ஆயுததாரிகள் துப்பாக்கியால் சுட்டதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எய்ட்ஸ் நோயாளிகளும் மனிதர்களே!

20ஆம் நூற்றாண்டில் இறுதிப் பகுதியிலிருந்து உலகை ஆட்டிப் படைக்கும் பயங்கர ஆட்கொல்லி நோயாகவே எய்ட்ஸ் இனங்காட்டப்பட்டது. இந்த கொடிய நோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இன்றுவரை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. அதேநேரம், அனைத்து நாடுகளும் இந் நோயின் பாதிப்பிலிருந்து விடுவிப்பதற் கான முயற்சிகளை தொடர்ந்து மேற் கொண்டு வந்தபோதிலும்கூட, இந்த நோயை பூரணமாகக் கட்டுப்படுத்த இன்றுவரை எந்தவித கண்டுபிடிப்புக் களும் மேற்கொள்ளப்படவில்லை.

குடாநாட்டில் மீண்டும் படுகொலை

கடந்த முப்பது வருட காலமாக இடம்பெற்று வந்த யுத்தத்தினை முடிவு செய்து தமிழ் மக்கள் குறிப்பாக குடா நாட்டு மக்கள் தற்போது சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்கும் அமைதியை நேசிப்பதற்கும் வழியமைத்துக் கொடுத்த அதியுத்தம ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவை பாராட்டுகின்றோம் என்று யாழ்ப்பாணத்திற்கு அடிக்கடி வருகை தருகின்ற அமைச்சர்கள் வாயார புகழ்ந்து நெஞ்சார வாழ்த்துத் தெரிவித்துச் செல் கிறார்கள்.

"சத்தியமா நாங்கள் செய்யேல்லை"

விக்கிலீக்ஸ்....!" பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்லே. வாய்க்குள் நுழைவதற்குக் கஷ்டமாக இருந்தபோதும் கூட தம்முடைய அரட்டைகளின் போது "விக்கிலீக்ஸ்" என்ற சொல்லை உச்சரிக்காவிட் டால் நம்மவர்கள் பலருக்கும் " பத்தியப்படுவ தில்லை". அந்தளவுக்கு எல்லோரையும் ஆட்கொண்ட ஒரு மந்திரச் சொல்லாக இது மாறி இருக்கிறது.

அகதி முகாமிலிருந்து கடத்தப்படும் உணவுப் பொருட்கள்: முகாம்வாசிகள் பட்டிணி

போரினால் இடம்பெயர்ந்து வவுனியா, மெனிக்பாம் முகாம்களில் உள்ளவர்களுக்காக கொடுக்கப்படும் உணவுப்பொருட்கள் அவர்களுக்குக் கொடுக்கப்படாமல் திட்டமிட்ட ஒரு குழுவினரால் அங்கிருந்து கடத்தப்படுவதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரொபர்ட் பிளெக் பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளார் – கருணா!

இலங்கைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவது ரொபர்ட் ஒ பிளெக் பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளதாக பிரதி மீள் குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா தெரிவித்துள்ளார்.

இலங்கை அகதிகளை நாடுகடத்த கூடாது

அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்ட இலங்கை தமிழ் அகதிகளை மீண்டும் அவுஸ்திரேலியா இலங்கைக்கு நாடுகடத்த கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. மனித உரிமைகள் கண்கானிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை என்பன இந்த வலியறுத்தலை விடுத்துள்ளதாக த ஒஸ்ட்ரேலியன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையை ஐ.நா. விசாரிப்பதே அமெரிக்க அரசாங்கத்தின் நோக்கம்

த பொஸ்ரன் குளோப் அதிரடித் தகவல்

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையை கொண்டுவருவதே அமெரிக்காவின் நோக்கமாகும். இதன் அடிப்படையிலேயே விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டது. இவ்வாறு அமெரிக்காவை தளமாகக் கொண்ட த பொஸ்ரன் குளோப் தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி: சிறுமி ஒருவரை கர்ப்பிணியாக்கினார் என்ற சந்தேகத்தில் முன்னாள் அரச உத்தியோகத்தர் ஒருவர் கைது!

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி சிறுமி ஒருவரை கர்ப்பிணியாக்கினார் என்ற சந்தேகத்தில் முன்னாள் அரச உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

புலிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்

புலிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற தலைப்பில் அட்டைப் படம் கொண்ட புத்தகம் வெளியீடு நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

புத்தகத்தின் முதல் பிரதியை பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வழங்கி வைத்தார். புத்தகத்தின் நூலாசிரியர் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ கொன்வேர்ட்டர்

கடந்த 10 ஆண்டுகளில் வீடியோ இயக்கும் சாதனங்களின் எண்ணிக்கையும், வகையும் அதிகரித்துள்ளன. வீடியோ கேம் சாதனங்கள், மொபைல் போன்கள், எம்பி 3 பிளேயர்கள், லெப்டொப் கொம்பியூட்டர்கள், நெட்புக் மற்றும் டெஸ்க்டாப் கொம்பியூட்டர்கள் என இந்தப்பட்டியல் தொடர்கிறது.

விவாகரத்துக்கு துணை போகும் வலைத்தளங்கள்

ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத் தளங்கள் உலக அளவில் ஏராளமான மக்களை ஒன்றிணைப்பதற்காக ஒருபுறம் பெருமையுடன் பேசிக்கொண்டிருக்கையில் மறுபுறம் அமெரிக்காவில் நடக்கும் ஒவ்வொரு ஐந்து விவாகரத்திலும் ஒரு விவாகரத்துக்கு ஃபேஸ்புக் காரணமாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

ஒன்லைனில் படங்களின் அளவை மாற்ற

படங்களின் அளவை ஒன்லைனில் மாற்றித் தருகிறது mypictr எனும் இணையதளம். இதன் மூலம் விரைவாகவும் இலகுவாகவும் உங்கள் படங்களின் அளவை நீங்கள் விரும்பும் அளவில் சிறிதாக்கியோ பெரிதாக்கியோ பெறலாம்.

அசுத்த வாயு மணத்தை தடுக்கும் நவீன உள்ளாடை கண்டுபிடிப்பு

அமெரிக்காவிலுள்ள உள்ளாடைகள் தயாரிக்கும் நிறுவனமொன்று புதிய வகையிலான உள்ளாடையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது உடலிலிருந்து வெளியேறும் வாயுவினால் எழும் மணத்தை இந்த ஆடைகள் மறைக்குமாம்.

விடைபெற்றுச் செல்லும் 2010ஆம் ஆண்டிற்கு...

2010ஆம் ஆண்டின் இறுதி நாள் இன்று. இதுவே 2011ஆம் ஆண்டின் முகிழ்ப்பிற்கான முதல் நாள். எனினும் இது 2010ஆம் ஆண்டின் இறுதி நாள் என்ற நினைப்பிலேயே எங்கள் சிந்தனையின் பதிவாக இருப்பதனால் விடைபெற்றுச் செல்லும் 2010ஆம் ஆண்டிற்கு நன்றி கூறி விடை பகருவது எங்கள் தமிழ்ப் பண்பாட்டிற்கு அழகாகும்.

சவுதி அரேபியாவில் துரத்தும் மரணங்கள்

குழந்தை ஒன்றின் மரணம் தொடர்பாக இன்னொரு இலங்கைப் பணிப்பெண் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அக்கரைப்பற்றைச் சேர்ந்த நாகராஜா விஜயகுமாரி என்ற பெண்ணே கைது செய்யப்பட்டவராவார்.

வெள்ளை வானில் வந்தோரால் இளைஞன் கடத்தப்பட்டார்

உரும்பிராய் மூன்று கோயிலுக்கு அண்மையான வீதியில் வைத்து இளைஞர் ஒருவர் வெள்ளை வானில் வந்த இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்றுக் காலை 8.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

பன்றிக்குப் பாய்ச்சிய மின்சாரம் பாகற்காய் பறிக்க வந்த இளைஞனைப் பலியெடுத்தது

மிளகாய்த் தோட்டத்தில் பன்றிக்கு வைத்த மின்சாரப் பொறியில் சிக்கிய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று அதிகாலை 3 மணியளவில் தெல்லிப்பழை கட்டுவன் மேற்கில் இடம்பெற்றது. இதில் கட்டுவன் மேற்கைச் சேர்ந்த சந்திரசேகரன் பாக்கியராஜ் (வயது 25) என்ற இளைஞனே உயிரிழந்தவராவார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட தெல்லிப்பழை பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டதாவது,

சுடப்பட்டுக் கிடந்த இலங்கை இளைஞருக்கு உதவாமல், கடையில் திருடிய வாடிக்கையாளர் (படங்கள் இணைப்பு)

அமெரிக்காவில் கடையொன்றில் பணியாற்றியபோது கொள்ளையனால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கை இளைஞரான சுஜேந்திரா அமரசிங்கம் காயமடைந்து வீழ்ந்து கிடந்த நிலையில், அவரை புறக்கணித்துவிட்டு அங்குள்ள பொருட்களைத் திருடுவதற்கு வாடிக்கையாளர் ஒருவர் முயற்சித்தாக கான்ஸாஸ் நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வரலாற்றில் இன்று

1695: இங்கிலாந்தில் வீட்டு ஜன்னல்களுக்கு வரி அறிமுகப்படுத்தப்பட்டது.

1857: ஒட்டோவாவை கனடாவின் தலைநகராக விக்டோரியா மகாராணியார் தெரிவுசெய்தார்.

2011 ஆம் ஆண்டு ராசி பலன்கள்

மேஷம்

உங்கள் ஜென்ம ராசிக்கு ருண ரோக ஸ்தானமான 7ஆம் வீட்டில் இந்த 2011ஆம் ஆண்டு முழுவதும் சனிபகவான் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இதனால் நீங்கள் நினைத்ததை நிறைவேற்றி கொள்ள முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும்.

வியாழன், 30 டிசம்பர், 2010

24ஐ திருமணம் செய்யும் 84 வயது ‘ப்ளேபாய்’

அமெரிக்காவில் வெளியாகும் கிளுகிளு பத்திரிகை ப்ளேபாய். அதன் உரிமையாளர் ஹக் ஹெப்னர். வயது 84. அவரது லேட்டஸ்ட் காதலி கிறிஸ்டல் ஹாரிஸ். வயது 24. தன்னைவிட 60 வயது குறைந்த பெண்ணை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக டுவிட்டரில் ஹெப்னர் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்கள் முன்புதான் ஹெப்னர் தனது 2வது மனைவி கிம்பர்லி கன்ராட் என்பவரை விவாகரத்து செய்தார்.

சர்வதேச விதவைகள் தினம் பிரகடனம்

ஐக்கிய நாடுகள் பொது சபையானது ஜூன் 23 ஆம் திகதியை சர்வதேச விதவைகள் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது.காபொனின் முதல் பெண்மணி சல்வியா பொங்கோ ஒன்டிம்பாவால் முன்வைக்கப்பட்ட மேற்படி யோசனைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் 192 பிரதிநிதிகள் அங்கீகாரம் அளித்துள்ளனர்.

41 வருட காலமாக காதில் முத்து இருப்பதை அறியாது வாழ்ந்த நபர்

41 வருடங்களாக காதில் முத்து ஒன்று உள்நுழைந்திருப்பதை அறியாது நபரொருவர் வாழ்ந்த சம்பவம் அமெரிக்க ஜோர்ஜிய மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

சீனாவில் திறந்து வைப்பு “ரோபோ' பணியாளர்களுடன் செயற்படும் விநோத உணவகம் (படங்கள் இணைப்பு)

எப்போதும் புன்னகையுடன் இனிமையாக வரவேற்கும் ரோபோ, முகம் சுழிக்காமல் உடனுக்குடன் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவேற்றும் உணவு பரிமாறும் ரோபோ, உணவு உண்ணும் போது ஆடிப்பாடி மகிழ்விக்கும் ரோபோ என்பன உள்ளடங்கலான ரோபோக்கள் ஆதிக்கம் செலுத்தும் விநோத உணவக மொன்று சீனாவில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மகனைக் கொன்று ஒரு வருட காலமாக சடலத்தை துணியால் சுற்றிவைத்திருந்த தாய்

தனது 3 வயது மகனுக்கு ஒலிவ் எண்ணெய் மற்றும் வினாகிரி என்பவற்றை தொடர்ந்து அருந்தக் கொடுத்து படுகொலை செய்து, சடலத்தை போர்வையொன்றால் சுற்றி ஒரு வருடத்துக்கு மேலாக வைத்திருந்த தாயொருவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட சம்பவம் அமெரிக்க இன்டியானா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

வளர்ப்பு மகனுடனான காதல் தொடர்புக்காக பிரம்படி தண்டனை பெற்ற பெண் மரணம்

வளர்ப்பு மகனுடன் காதல் தொடர்பு கொண்டிருந்த குற்றச்சாட்டில் பொதுமக்கள் முன்னிலையில் பெண்ணொருவர் பிரம்பால் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பங்களாதேஷில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் மேற்படி படுகொலையுடன் தொடர்புடைய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பளபளப்பான முகத்திற்கு வெள்ளரிக்காய்


வெள்ளரிக்காய்ச் சாறு இயற்கையான பிளீச் ஆகும். வெள்ளரிக்காய் உடலுக்குக் குளுமை மட்டு மல்லை, முகத்திற்கு ஒளி தரக்கூடியது. மாசுமருவற்ற பளபளப்பான முகத்தைப் பெறத் தினமும் முகத்தில் வெள்ளரிக்காய் சாற்றைத் தடவுங்கள்.

பொட்டுகளை தேர்ந்தெடுப்பது எப்படி?

இன்றைய கால கட்டத்தில் பொட்டு ஒரு அழகு பொருளாக மாறி வருகிறது. அன்று ஒரு குங்கும பொட்டும் அல்லது சாந்து பொட்டு வைப்பார்கள். அது மழையில், வியர்வையில் அழிந்துவிடுவதால் கொஞ்சம் மாற்றி அது ஸ்டிக்கர் பொட்டானது.

மதத்துவேஷ சட்டத்தின் கீழ் கைதான பெண்ணை விடுதலை செய்ய கிறிஸ்தவர்கள் போராட்டம்

மதத்துவேஷ சட்டத்தின் கீழ் ஆசியா பீவி என்ற கிறிஸ்தவ பெண்ணுக்கு கோர்ட்டு தூக்குத்தண்டனை விதித்தது. இந்த பெண்ணை விடுதலை செய்யக்கோரி, அந்த நாட்டு சிறுபான்மை இன கிறிஸ்தவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

இணையதளத்தில் பதிவு செய்து விட்டு மனைவியை கொலை செய்தவர்

தைவான் நாட்டை சேர்ந்தவர் வாங்க் ஜிங் சி. இவர் என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தன் மனைவியுடன் ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் குடியேறினார்.

வருமான வரி பாக்கி வைத்த ஆலிவுட் நடிகை பமீலா

ஆலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன். இவர் நிதி நெருக்கடியால் தத்தளித்து வருகிறார். 43 வயதான அவர், அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்த முடியாமல் தவிக்கிறார்.

மனைவியின் மின்னஞ்சலை பார்வையிட்டமை குற்றமா?

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் ஒக்லாண்ட் நகரத்தைச் சேர்ந்த 33 வயது இளைஞன் ஒருவர் மனைவியின் மின்னஞ்சலை கள்ளத்தனமாக பார்வையிட்டமைக்காக நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு உள்ளார்.இவரின் பெயர் லியோன் வாக்கர்
வீட்டில் இவரும், மனைவியும் ஒரு மடிக் கணனியைத்தான் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.

நாயால் கடித்து குதறப்பட்டு படுகாயமடைந்த பெண் மரணம்

பெண்ணொருவர் நாயால் கடித்துக் குதறப்பட்டு உயிரிழந்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
வெலிங்டன் நகரில் வசிக்கும் பார்பரா வில்லியம்ஸ் (40 வயது) என்ற மேற்படி பெண்ணின் வீட்டுக்குள் பிரவேசித்த குறிப்பிட்ட நாய் அவரைக் கடித்துக் குதறியுள்ளது.

முதலிரவில் மூச்சுத் திணறி புதுமணத் தம்பதி மரணம்

முதலிரவு அறையை வெப்பமூட்டுவதற்கு பயன்பட்ட எரிவாயு வெப்ப மூட்டியிலிருந்து வெளிப்பட்ட காபனீரொட்சைட்டு புகை காரணமாக மூச்சுத் திணறி புதுமணத் தம்பதியொன்று பதாபகரமாக உயிரிழந்த சம்பவம் ஜோர்தானில் சனிக்கிழமை இடம் பெற்றுள்ளது.

ஒரேசமயத்தில் கருத்தரித்த 3 சிசுக்களில் ஒரு சிசு, ஏனைய இரு சிசுக்களும் குழந்தைகளாக பிறந்து 11 வருடங்களின் பின் பிறந்த அதிசய சம்பவம் பிரித்தானியாவில் இடம் பெற்றுள்ளது

மேற்படி பிள்ளைகளின் தாயாரான லிஸா ஷெப்பர்ட்டுக்கும் அவரது கணவர் அட்றியனுக்கும் 1998 ஆம் ஆண்டு திருமணமானது.

பருமனான தாயின் மாபெரும் நத்தார் போசனம் (படங்கள் இணைப்பு)


உடல் பருமனைக் குறைத்து கண் கவரும் தோற்றத்தில் வலம் வருவதற்கு ஆசைப்படும் பெண்கள் மத்தியில் முற்றிலும் மாறுபட்டவராக நியூஜெர்ஸியைச் சேர்ந்த டொனா சிம்ஸன் என்ற பெண் விளங்குகிறார்.

இறந்துவிட்டதாக மருத்துவர்களால் பிரகடனப்படுத்தப்பட்டு இரு நாட்களின் பின் உயிர்த்தெழுந்த பெண்மணி

மருத்துவர்களால் இறந்துவிட்டதாக பிரகடனப்படுத்தப்பட்ட 88 வயது பெண்மணியொருவர், இரு நாட்களின் பின் சவப்பெட்டியிலிருந்து உயிர்த்தெழுந்த அதிசய சம்பவம் பிரேசிலில் இடம்பெற்றுள்ளது.
மினஸ் ஜெரெயிஸ் மாநிலத்திலுள்ள இபதிங்கா எனும் இடத்தைச் சேர்ந்த மயா தாஸ் டொரெஸ் கொன்சிகாவோ என்ற மேற்படி பெண்மணி, சுகவீனற்ற நிலையில் கடந்த புதன்கிழமை மாலை பிராந்திய பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தென் ஆபிரிக்க முன்னாள் முதல் பெண்மணி வின்னி மண்டேலாவின் மாபெரும் இசை நிகழ்ச்சி

தென் ஆபிரிக்க ன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மதிகிஸெலா மண்டேலா, பிறிடோரியா நகரில் தனது முதலாவது மாபெரும் இசை நிகழ்ச்சியை எதிர்வரும் வருடம் நடத்தவுள்ளதாக அறிவிப்புச் செய்துள்ளார்.

தான் கடத்தப்பட்டதாக போலியாக நாடகமாடி கணவரிடம் கப்பப் பணம் பெற்ற பெண் கைது

தனது கணவரிடம் பணத்தை பெற தான் கடத்தப்பட்டதாக நாடகமாடி 20,000 ஸ்ரேலிங் பவுண் கப்பப்பணம் கோரிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஸ்பெயினில் இடம்பெற்றுள்ளது.

பெண்ணின் மார்பக எக்ஸ்ரே படத்தில் இயேசு கிறிஸ்து? (படங்கள் இணைப்பு)

கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வடகொரிய கடைகளில் மனிதக் கழிவுகள் விற்பனை

வட கொரியாவில் உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டிலுள்ள பல கடைகள் மனிதக் கழிவுகளை இந்த வருடம் விற்க ஆரம்பித்துள்ளதாக தென் கொரிய பகுப்பாய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.

புகைபிடிக்கும் பழக்கத்தை 9 மாதமாக நிறுத்தியுள்ள ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, தனது புகை பிடிக்கும் பழக்கத்தை கடந்த 9 மாதங்களாக கைவிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் ரொபேர்ட் கிப்ஸ் தெரிவித்தார்.

இனி சிலோன் இல்லை ஶ்ரீ லங்கா

இதுவரையில் சிலோன் என பெயர் ஆரம்பமாகும் பொது நிறுவனங்களின் பெயர் ஆரம்பத்தினை, ஶ்ரீ லங்கா என மாற்றுவதற்கு அரசு தீர்மானம் எடுத்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொலைக்களமாக மாறிவரும் யாழ்

யாழ், குடாநாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களால் யாழ், மக்கள் பெரும் பீதியில் உள்ளனர். மூன்று வாரங்களுக்குள் யாழ், குடாநாட்டில் மூன்றாவது கொலை பதிவாகியுள்ளதாக யாழ், மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

புதன், 29 டிசம்பர், 2010

விஜயக்குமாருடன் மோதி வரும் மகள் வனிதா அரசியலில் குதிக்கிறார்

தந்தை விஜயக்குமாருடன் கடுமையாக மோதி வரும் நடிகை வனிதா விரைவில் அரசியல் கட்சி ஒன்றில் சேர்ந்து பணியாற்றப் போகிறாராம். இதை அவரே கூறியுள்ளார்.

கப்பம் கோரி கடத்தப்பட்ட சாவகச்சேரி இளைஞன் சடலமாக மீட்பு!

தென்மராட்சியின் மீசாலைப் பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கப்பம் கோரி ஆயததாரிகளால் கடத்தப்பட்ட 28 வயதுடைய மகேந்திரன் செல்வம் என்பவரது சடலமே இது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா கலிபோர்னியாவில் இலங்கைத் தமிழ் பொறியியலாளர் சுட்டுக்கொலை!

இலங்கை வவுனியாவைச் சோ்ந்த தமிழ் பொறியியலாளர் ஒருவர் அமெரிக்கா கலிபோர்னியா மாநகரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலையில் நித்தியானந்தா: போராட்டம்-கோவில் பின்வாசல் வழியாக ஓட்டம்

 தனது 34வது பிறந்த தினத்தையொட்டி திருவண்ணாமலை கோவிலுக்கும் தனது ஆசிரமத்துக்கும் வந்த 'குஜால்' சாமியார் நித்யானந்தாவுக்கு எதி்ர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.

என் தாயைத் தேடித் தாருங்கள் - ஷானிக்கா

தன்னை சிறுவயதில் தத்துக்கொடுத்த பெற்றெடுத்த தாயினை தனக்கு இனம்காண தற்போது பெல்ஜியத்தில் வாழும் 23 வயதான இலங்கைப் பெண் ஷானிக்கா லிப்பேட் உதவி கோரியுள்ளார்.

தோமஸ் அல்வா எடிசன் வானொலிக்கான காப்புரிமம் பெற்ற நாள்

வானொலி அல்லது ரேடியோ (Radio) என்பது ஒரு குறிப்பிட்ட அதிவெண்களைக் கொண்ட மின்காந்த அலைகளின் வழி தொடர்பு கொள்ளும் ஒரு கம்பியில்லாத் தொலைத்தொடர்பு ஊடகமாகும்.

பாதிரியார் விவகாரம்: வவுனியா சிறைச்சாலையில் பதற்றம் தொடர்கிறது

மன்னாரில் சிறுவர் இல்லமொன்றைச்சேர்ந்த சிறுமியர் இருவர் மீது பாலியல் குற்றம் புரிந்ததாகக் கூறப்படும் பாதிரியார் மீது வவுனியா சிறைச்சாலைக் கைதிகள் கடுமையாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கருணாவின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது

பிரதி மீள் குடியேற்ற அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரனின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலுக்காக உளவு பார்த்தவர் தூக்கில் போடப்பட்டார்

ஈரான் நாட்டை சேர்ந்தவர் அலி அக்பர் சியாதத். இவர் 2004-ம் ஆண்டு முதல் இஸ்ரேலின் உளவுத்துறையான மொசாத் உடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இவர் தன் மனைவியுடன் ஈரானை விட்டு வெளியேற முயன்றபோது இவரை போலீசார் கைது செய்தனர். இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

நடிகர் பிரபுதேவா - மனைவி ரமலத் சுமூகமாக பிரிகிறார்கள்

நடிகர் பிரபுதேவாவும், அவரது மனைவி ரமலத்தும் பரஸ்பரம் விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல கோர்ட்டில் நேற்று மனுத்தாக்கல் செய்தனர்.

டான்சு மாஸ்டர்

சினிமா டான்சு மாஸ்டர் சுந்தரத்தின் மகன் பிரபுதேவா. டான்சு மாஸ்டராக இருந்து நடிகர் ஆனவர். பிரபுதேவா டான்சு மாஸ்டராக பணிபுரிந்தபோது அவருக்கும், குரூப் டான்சராக இருந்த ரமலத்துக்கும் காதல் ஏற்பட்டது. அவர்களின் காதலை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளாததால் 1995-ம் ஆண்டு இருவரும் ரகசியமாக திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு விஷால், ரிஷி ராகவேந்திர ராவ், ஆதித் தேவா என்ற 3 மகன்கள். இவர்களில் விஷால், புற்றுநோய் காரணமாக 2008-ம் ஆண்டு இறந்துபோனான்.

செவ்வாய், 28 டிசம்பர், 2010

51 வயது பெண்மணி காதலை ஏற்க மறுத்ததால் 59 வயது நபர் தற்கொலை

51 வயது பெண்மணியொருவர் தனது காதலை ஏற்காததால் 59 வயது நபரொருவர் அப்பெண்ணின் வீட்டு வாசலருகே சென்ற திங்கட்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் மலேசிய கோலாலம்பூரில் இடம்பெற்றுள்ளது.

தனது பணம் காரணமாக இளைஞர்கள் விலகிப்போய்விடுவரோ எனக் கலங்கும் 20 வயது நடிகை

20 வயதிலேயே உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக விளங்குகிறார் எம்மா வட்ஸன். ஹரிபொட்டர் திரைப்படத்தில் நடித்த எம்மா வட்ஸன் இதுவரை 33 மில்லியன் அமெரிக்க டொலர்களை சம்பாதித்துள்ளார்.

ஆலிவுட் டைரக்டர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கிய படங்களுக்கு மத்திய கிழக்கு நாடுகளில் தடை

ஜுராசிக் பார்க் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க். 2006-ம் ஆண்டு இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் 34 நாட்கள் யுத்தம் நடந்தது. இந்த யுத்தம் காரணமாக 1300 பேர் பலியானார்கள். இந்த யுத்தத்தின் போது ஸ்பீல் பர்க் இஸ்ரேல் நாட்டுக்கு ரூ.5 கோடியை நன்கொடையாக வழங்கினார்.

17வயதேயான யுவதி தன்னுடன் 76 பேர் பாலியல் ரீதியான தொடர்புகளைக் கொண்டிருந்ததாக கூறுகின்றார்!

17வயதேயான யுவதி ஒருத்தி தன்னுடன் 76 பேர் பாலியல் ரீதியான தொடர்புகளை மேற்கொண்டிருந்ததாக தெரிவித்த தகவல் யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல