பிடிவாதக்காரர்களை ஒற்றைக்காலில் நின்று சாதிப்பவர்கள் என்று சொல்வதுண்டு. ‘உங்களாலும் ஒற்றைக்காலில் நிற்க முடிந்தால் நீங்கள் பிடிவாதக்காரரோ இல்லையோ, ஆரோக்கியமானவர் என்றே அர்த்தம்’ என்கிறது ஜப்பானில் மூளைத்தாக்கு நோய் பற்றி வெளியிடப்பட்ட ஆய்விதழ் தகவல் ஒன்று.
ஒரே காலில் தாக்குப் பிடித்து 20 நொடிகள் வரை நிற்க முடிந்தவர்களுக்கு எந்தப் பிரச்சினை யும் இல்லை. அவ்வாறு நிற்க முடியாமல் திணறுகிறார்கள் என்றால் அவர்களுக்கு மூளைத்தாக்கு நோய் அல்லது மறதி நோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதாம்.
ஒரு காலில் சமாளித்து நிற்க முடியாதவர்களுக்கு மூளையில் சிறிய அளவிலான ரத்தக்கசிவு இருக்கலாம் என்கிறது இந்த ஆய்வு.
இதனால் அடுத்தகட்டமான மூளைத்தாக்கு நோயும் மறதி நோயும் ஏற்பட வாய்ப்புண்டாம். 67 வயதுடைய 1,387 ஆண், பெண்களை ஒற்றைக்காலில் நிற்க வைத்து ஆய்வுக்கு உள்ளாக்கி, எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து அவர்களின் மூளையின் செயல்பாடுகளையும் ஆராய்ந்தனர்.
ஒற்றைக்காலில் நிற்க இயலாத 30 சதவிகிதம் பேருக்கு மூளையில் சிறிய அளவிலான காயங்களோ, சில பகுதிகளில் போதுமான ரத்த ஓட்டம் இல்லாமலோ இருந்தது. 16 சதவிகிதம் பேருக்கு மூளையில் இருக்கும் ஒரு காயமே பிரச்சினைகளை கொண்டு வரும்படி இருந்தது. 30 சதவிகிதத்தினருக்கு 2 அல்லது அதற்கு மேற்பட்ட சிறிய கிரத்தக்கசிவுகள் மூளையில் இருந்தன. வயதானவர்களுக்கு மூளைத்தாக்கு நோய் வரும் அறிகுறியை கண்டறிவது கடினம்.
இவர்களை ஒரு காலில் சில நொடிகள் நிற்க வைத்துப் பார்த்து, எளிதில் அறிகுறியை அறிந்து விட முடியும். மறதி நோயையும் அறியலாம்.ஒரு காலில் நிற்கும் போது சமநிலை தவறினாலோ, அடுத்த காலின் பக்கம் அதிகமாக சாய்ந்தாலோ மூளை சம்பந்தமான நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்றும் எச்சரிக்கிறது இந்த ஆய்வு முடிவு!
ஒரே காலில் தாக்குப் பிடித்து 20 நொடிகள் வரை நிற்க முடிந்தவர்களுக்கு எந்தப் பிரச்சினை யும் இல்லை. அவ்வாறு நிற்க முடியாமல் திணறுகிறார்கள் என்றால் அவர்களுக்கு மூளைத்தாக்கு நோய் அல்லது மறதி நோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதாம்.
ஒரு காலில் சமாளித்து நிற்க முடியாதவர்களுக்கு மூளையில் சிறிய அளவிலான ரத்தக்கசிவு இருக்கலாம் என்கிறது இந்த ஆய்வு.
இதனால் அடுத்தகட்டமான மூளைத்தாக்கு நோயும் மறதி நோயும் ஏற்பட வாய்ப்புண்டாம். 67 வயதுடைய 1,387 ஆண், பெண்களை ஒற்றைக்காலில் நிற்க வைத்து ஆய்வுக்கு உள்ளாக்கி, எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து அவர்களின் மூளையின் செயல்பாடுகளையும் ஆராய்ந்தனர்.
ஒற்றைக்காலில் நிற்க இயலாத 30 சதவிகிதம் பேருக்கு மூளையில் சிறிய அளவிலான காயங்களோ, சில பகுதிகளில் போதுமான ரத்த ஓட்டம் இல்லாமலோ இருந்தது. 16 சதவிகிதம் பேருக்கு மூளையில் இருக்கும் ஒரு காயமே பிரச்சினைகளை கொண்டு வரும்படி இருந்தது. 30 சதவிகிதத்தினருக்கு 2 அல்லது அதற்கு மேற்பட்ட சிறிய கிரத்தக்கசிவுகள் மூளையில் இருந்தன. வயதானவர்களுக்கு மூளைத்தாக்கு நோய் வரும் அறிகுறியை கண்டறிவது கடினம்.
இவர்களை ஒரு காலில் சில நொடிகள் நிற்க வைத்துப் பார்த்து, எளிதில் அறிகுறியை அறிந்து விட முடியும். மறதி நோயையும் அறியலாம்.ஒரு காலில் நிற்கும் போது சமநிலை தவறினாலோ, அடுத்த காலின் பக்கம் அதிகமாக சாய்ந்தாலோ மூளை சம்பந்தமான நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்றும் எச்சரிக்கிறது இந்த ஆய்வு முடிவு!



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக