வீட்டிலிருந்து புத்தக அலுமாரியை இடம் மாற்றும் நோக்கத்தில் அலுமாரிக்கருகில் மேசையொன்றைப் போட்டு புத்தகங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து மேசையில் அடுக்கினேன். மேல் தட்டிலிருந்த எல்லாப் புத்தகங்களையும் எடுத்து வைத்த பின் தட்டில் விரித்திருந்த பழசாகிப் போன தாள்களை அகற்றுவதற்காக அவற்றை எடுத்த போது ஒரு கடித உறை கீழே விழுந்தது. அதை எடுத்துப் பார்த்தேன். ஆங்கிலத் தட்டச்சு எழுத்துக்களால் என் பெயருடன் சேர்ந்த முகவரி கடிதம் பிரிக்கப்பட்டிருந்தது.
இக் கடிதம் யாரால் எழுதப்பட்டிருக்கும்? இதை யார் பிரித்திருப்பார்கள்? இதை ஏன் என்னிடம் தரவில்லை? என்று பல கேள்விகள் மனதில் உதிக்க உறையிலிருந்து கடிதத்தை வெளியில் எடுத்தேன்.
மணி மணியான சிங்கள எழுத்துக்களால் நீண்ட தாளொன்றின் இரு பக்கமும் எழுதப்பட்டிருந்தது. எழுத்தைப் பார்த்ததுமே யாருடைய கடிதம் எனப் புரிந்து கொண்டேன். அக்கணமே கண்கள் கண்ணீரால் நிறைந்தன.
செய்து கொண்டிருந்த வேலையை மறந்தவனாக அப்படியே சுவரில் சாய்ந்து தரையில் உட்கார்ந்தேன். மனது பூராகவும் இனம் புரியாத ஒரு பரபரப்புடன் கடிதத்தை வாசிக்க ஆரம்பித்தேன்.
அந்தக் கடிதத்தை வாசித்து முடிக்க எனக்கு அதிக நேரம் எடுத்தது. அந்தச் சிங்களக் கடிதத்தை இலகுவாக வாசித்துக் கொள்ளுமளவிற்கு எனக்குச் சிங்கள மொழியறிவு இல்லாத போதும் அதை எழுதியவனின் இதயத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளக்கூடிய அறிவு எனக்கு இருந்தது. அதனால் அக்கடிதம் கூறி நிற்கும் எண்ணக்கருவை என்னால் விளங்கிக் கொள்ள முடிந்தது. ஆம் என்னையும் என் குடும்பத்தையும் உயிருக்குயிராய் நேசித்த சகோதர இனத்தவனான என் இனிய நண்பன் விஜித்தவின் கடிதம் தான் அது! இருபது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டிருந்த அக்கடிதம் இன்றுதான் என் கண்ணில் பட்டிருக்கிறது.
கடிதத்தை வாசித்து முடித்த போது நான் நன்றாக அழுது விட்டிருந்தேன். அப்போது ஏதோ அலுவலாக நான் இருந்த பக்கமாக வந்த அத்தான்,. நான் இருந்த கோலத்தைப் பார்த்துத் திடுக்கிட்டவராக 'என்ன தீபன் ஏன் அழுகிறாய்?' என்று கேட்டபடி அருகில் வந்தவர் 'என்ன கடிதம்? அது யார் எழுதியது?" என்று கேட்டார்.
நான் எதுவும் பேசவில்லை. மௌனமாக அத்தானிடம் கடிதத்தைக் கொடுத்தேன்.
'என்ன இது சிங்களக் கடிதம் ? யார் அனுப்பியது ? என்று கேட்டார்.
எனது நண்பன் விஜித்த அனுப்பிய கடிதம் அத்தான். வாசிச்சுப் பாருங்க' என்றேன்.
நானும் அத்தானும் உரையாடிய சத்தம் கேட்டு அவ்விடத்திற்கு அம்மா, அக்கா, தங்கைகள், தம்பி எல்லோருமே வந்து சேர்ந்து விட்டனர். நான் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய் தரையில் உட்கார்ந்திருப்பதையும் அத்தான் கையில் கடிதத்துடன் நிற்பதையும் பார்த்துக் குழப்பமடைந்தவர்களாக ஆளையாள் பார்த்துக் கொண்டனர். அவர்கள் ஒவ்வொருவராக வினாவெழுப்புவதற்குள் அத்தானே விபரம் கூறினார்.
விஜித்தவின் கடிதமென அறிந்ததும் அதை வாசித்துச் சொல்லும் படி எல்லோரும் அவரை வற்புறுத்தினர். அத்தானுக்குச் சிங்களம் தண்ணீர்பட்ட பாடு!
அவர் பதுளையில் பிறந்து வளர்ந்தவர். சிங்கள மீடியத்தில் கல்வி கற்றவர். எண்பத்து மூன்று கலவரத்தில் இடம்பெயர்ந்து கிழக்கு மாகாணத்து வாசியாகி எண்பத்தொன்பதில் ஒரு கோவிலில் அக்காவைக் கண்டு விருப்பப்பட்டு தன் பெற்றோர் மூலமாகப் பெண் கேட்டு முறைப்படி திருமணம் செய்து கொண்டவர்.
அத்தான் கடிதத்தை வாசித்து ஒவ்வொரு வசனமாக தமிழாக்கம் செய்தார்.
அன்பான தீபன்,
'எப்படி இருக்கிறீர்கள்? இருக்கிறீர்களா அல்லது நடந்து முடிந்த கலவரத்தில் நீங்களும் இல்லாமல் போனீர்களா? தெரியவில்லை. கடவுள் கிருபையினால் உங்கள் பகுதியில் அப்படியேதும் நடந்திருக்காதென நம்புகிறேன்.
தீபன் எனக்கு எதுவுமே புரியவில்லை. நாம் எல்லோரும் மனிதர்கள் தானே தீபன் ? ஏன் ஆளை ஆள் அடிக்கிறோம்? ஒருவரையொருவர் கொல்கிறோம்? விலங்குகள் கூட தம்மினத்தைக் கொல்வதில்லையே தீபன் ? நாம் ஏன் இப்படி?
கலவரம் நடந்த போது நானும் மாலினியும் கொழும்பில் தான் இருந்தோம் நான் கண்ட காட்சிகளையும் தமிழ் மக்கள் பட்ட பாடுகளையும் நேரில் உங்களைக் காணும் போது சொல்கிறேன். அந்தக் காட்சிகளைக் கண்டு நான் அடைந்த மன வேதனையும் அழுத அழுகையும் கொஞ்சமல்ல. உண்ண முடியாமல் உறங்க முடியாமல் தவித்தேன்.
அந்த விரும்பத்தகாத காட்சிகளைப் பார்த்தும் அவற்றைத் தடுக்கக் கூடிய நிலைமை இருக்கவில்லை எனக்கு.
நான் மிக மனம் நொந்து போயிருந்த வேளையில் என் நண்பனொருவன் என்னைத் தன் வீட்டிற்கு அழைத்தான். அங்கு நான் சென்றேன். அவனது வீட்டில் இரண்டு தமிழ் குடும்பங்களைக் கொண்ட ஒன்பது பேரைத் தன் வீட்டில் இரகசியமாக மறைத்து வைத்துக் காப்பாற்றிக் கொண்டிருந்தான். அவனது இந்தச் செயல் எனது துயரமான மனதுக்கு சற்றே ஆறுதலளிப்பதாக இருந்தது. அந்த இரு குடும்பங்களையும் காப்பாற்றி நிலைமை சற்று சீரடைந்ததும் அவர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பும் பணியில் நண்பனுக்கு வலது கரமாக உதவினேன். எனது நண்பனை நினைத்துப் பெருமையாக இருந்தது. ஆக எல்லோருமே தப்பானவர்களல்ல. மனித நேயம் இன்னும் மரணித்துப் போய் விடவில்லையென சிறிது நிம்மதியடைந்தேன். அந்த இரு குடும்பங்களுக்கும் உதவும் போது எனக்கு உன்னையும், அப்பா, அம்மா, தம்பி, தங்கைகளையுமே ஞாபகத்திற்கு வந்தது.
தீபன் ஏனோ தெரியவில்லை நடந்து முடிந்த இந்த அசம்பாவிதத்திற்காக இங்குள்ள எல்லோர் சார்பிலும் உன்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் போலிருக்கிறது. மன்னித்துக் கொள் தீபன். அப்பா அம்மா தம்பி தங்கைகளிடமும் நான் மன்னிப்புக் கேட்டதாகச் சொல். கடிதத்தில் சில இடங்களில் எழுத்துக்கள் கலங்கியிருக்கின்றன. அது என் கண்ணீர்த்துளிகள் பட்ட இடங்கள். முடியவில்லை தீபன்... என் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவே இல்லை. வீட்டிலுள்ளவர்கள் சில சமயம் என்னைக் கிண்டல் செய்கிறார்கள். சில சமயம் ஏசுகிறார்கள். என் மனதின் வலி எனக்குத்தானே தெரியும்.
தீபன் நடந்து முடிந்த இந்தக் கோரமான சம்பவங்களை காலம் மறக்கச் செய்யும். நாம் முன்போல ஒற்றுமையாக வாழும் நிலைமை ஏற்படும். அப்போது நாம் சந்திப்போம் அதற்காகப் பிரார்த்திப்போம் காத்திருப்போம். இறைவன் துணை!
உங்களையெல்லாம் மறவாத விஜித்த.
விஜித்தவின் கடிதத்தை அத்தான் வாசித்து முடித்த போது எல்லோருமே அழுது விட்டிருந்தனர். கலவரத்தில் பாதிக்கப்பட்டு ஒரு தம்பியையும் சகல உைடமைகளையும் இழந்து இடம்பெயர்ந்து வந்த அத்தானுக்கு சகோதர இனத்தாருடன் ஏற்பட்டிருந்த கசப்புணர்வு கூட விஜித்தவின் கடிதத்தால் மறைந்து விட்டது போலிருந்தது. அத்தானும் கண் கலங்கி எப்பேர்ப்பட்ட நல்ல மனசு இவனுக்கு என்றார் மனசார!
அவன் மிச்சம் நல்லவன். இஞ்ச அவன் இருந்த காலத்தில் நான் அவனைப் பத்தி அதிசயப்பட்டிருக்கன். அவன் ஒரு தெய்வப் பிறப்பு என்றார் அம்மா.
அம்மாவைத் தொடர்ந்து அக்கா தம்பி தங்கைகள் எல்லாம் விஜித்த பற்றிய தமது மனப்பதிவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
'ஏன் அம்மா இந்தக் கடிதத்தை என்னட்டத் தரல்ல? யார் இதை இந்த அலுமாரிக்குள் மறச்சு வச்சது? என்று அம்மாவைக் கேட்டேன்.
கடிதத்தை நாங்க மறச்சு வைக்கல. இது அப்பாட வேலையாகத்தானிருக்கும். அவர் தானே அடிக்கடி இதைத் திறப்பவர் ? இந்தக் கடிதம் வந்தது கூட எங்களுக்குத் தெரியாதென்றார் அம்மா.
அம்மாவின் விளக்கம் சரிதான். ஏதோ காரணம் கருதி இதைப் பற்றி இவர்களிடம் அப்பா சொல்லாமல் விட்டிருக்கலாம். அவர் தான் இப்போது உயிருடன் இல்லையே என மனசில் நினைத்துக்கொண்டேன்.
'இப்படிப்பட்ட ஒரு நல்லவனைப் பற்றி இது வரை யாருமே என்னிட்ட சொல்லலையே என்று கேட்டார் அத்தான்.
சொல்லலத்தான் அத்தான். ஆனாலும் நாங்க யாருமே அவன மறக்கல. எல்லார்ட்ட மனசிலயும் அவன்ர நினைப்பு இருக்கு. பாவம் கடிதத்தை அனுப்பி விட்டுப் பதிலுக்காக காத்திருப்பான்" என்றேன் நான்.
'இப்பதான் நாட்டு நிலைமை நல்லாயிருக்கே. ஒருக்கப் போய் அவன பார்த்துப் பேசிற்று வரலாமே' என்றார் அம்மா. 'ஓமம்மா கட்டாயம் போகவேணும். ஏன் அத்தான் ஒரு தரம் நான் போகத்தான் வேணும். நீங்களும் வாறீங்களா?' என்று அத்தானை கேட்டேன்.
'கட்டாயம் போவம் எனக்கு அவரைப் பாக்க வேணும் போலிருக்கு' என்றார் அத்தான்.
அன்றிரவு உணவு வேளையிலும் அம்மா விஜித்த பற்றி நினைவு கூரவே எல்லோரும் அவனைப் பற்றி அவனது நல்ல குணங்கள் பற்றிப் பேசினோம். அவனது மனது மிகவும் புண்பட்டிருப்பதை மற்றவர்களை விட என்னால் நன்கு உணர முடிந்தது.
இரவு படுக்கைக்குப் போன எனக்கு தூக்கம் வரவில்லை. விஜித்தவின் நினைப்பே தூங்க விடாமல் என்னை அலைக்கழித்தது.
ஆயிரத்து தொளாயிரத்து எழுபத்தெட்டாம் ஆண்டு. நான் எனது பிரதேசத்து நெல் கொள்வனவு நிலையமொன்றில் சிற்றூழியனாக வேலை செய்தேன். அப்போது களஞ்சியப் பொறுப்பாளராக வந்து சேர்ந்தார் விஜித்த.
ஆரம்பத்தில் சாதாரணமாக பழகிய விஜித்த நாளாக நாளாக என்னிடம் மிகவும் பிரியம் காட்டினார். கிட்டத்தட்ட என்னை விட எட்டு வயது கூடியவர். பல்கலைக்கழகப்பட்டதாரி. நான் சாதாரண தரத்தில் கோட்டை விட்டவன். அவர் வசதியான குடும்பத்தவர். தனது தேவைக்காக கார் கூட வைத்திருக்கிறார். நான் வறிய குடும்பத்தவன்.
இனம், மொழி, வயது, பொருளாதார ஏற்றத்தாழ்வு, கல்வித்தரம் எதுவுமே அவரைக் கட்டுப்படுத்தவில்லை. தீபன் தீபன் மல்லி என்று தன் உடன் பிறப்பாகப் பாசம் காட்டினார்.
அந்த வருடம் வந்த பொங்கல் திருநாளுக்கு அவரை என் வீட்டிற்கு அழைத்தேன். மகிழ்வோடு வந்தார்.
எனது அப்பாவுக்கு சிங்களம் நன்றாகத் தெரியும். அதனால் அப்பாவிடம் பல விடயங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். அப்பாவை அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. அம்மா தம்பி சகோதரிகள் எல்லோருமே விஜித்தவின் நல்ல பண்புகளையும் அவனது அன்பையும் பார்த்து மிகச் சந்தோஷப்பட்டனர். மொத்தத்தில் விஜித்த என் பெற்றோருக்கு இன்னொரு மகனானார். தம்பி சகோதரிகளுக்கு மற்றொரு அண்ணணானான்.
எங்கள் வீட்டில் நடக்கும் சின்னச் சின்ன நிகழ்வுகளில் கூட விஜித்த பங்கேற்றான். எங்கள் அயலவர்களுடன் அவனும் அன்பாகப் பழகினான். ஊரிலிருந்து வரும் போது றம்புட்டான், கொய்யா, பலாப்பழம் என நிறையவே கொண்டு வருவான். ஏன் இப்படி அதிகமாக என்று கேட்டால் பக்கத்து வீடுகளுக்கும் கொடுக்கச் சொல்வான். சில சமயம் அவனே கொண்டு போய்க் கொடுத்து விட்டு வருவான்.
எம்பிலிப்பிட்டிய என்னும் அவனது கிராமத்திற்கு என்னைப் பல தடவை அழைத்துச் சென்றுள்ளான். அவனுக்கு எண்பத்தோராம் வருடம் கொழும்பில் திருமணம் நடந்த போது எங்கள் குடும்பத்தினர் அனைவரையும் கட்டாயம் வரச் சொல்லி அவனது செலவில் வாகனமொன்றையும் ஏற்பாடு செய்து தந்தான். எல்லோரும் போய் வந்தோம்.
ஆசிரியையான அவனது மனைவியைத் திருமணத்திற்கு அடுத்து வந்த விடுமுறையில் அழைத்து வந்து ஒரு வாரம் வரை எங்கள் வீட்டில் தங்க வைத்து எங்களைச் சந்தோஷப்படுத்தினான். மாலினிக்கு நன்றாகத் தமிழ் பேச முடியுமாதலால் அவளும் எங்களுடன் இயல்பாகப் பழகினாள். வீட்டில் நின்ற போது ஒரு நாள் அவர்களிருவரும் கடைக்குப் போய் சமையலுக்கான எல்லாப் பொருட்களையும் வாங்கி வந்து அம்மாவை சமையலறைப் பக்கம் வரக் கூடாதென்று வெளியேற்றி விட்டு அவர்களிருவருமாகச் சமைத்து எங்களை உட்கார வைத்துப் பரிமாறினர்.
எங்களுக்கும் விஜித்தவுக்குமான நட்பையும் அன்பையும் பார்த்து எமது அயலவர்கள் ஆச்சரியப்படுவதுண்டு. இது பூர்வ ஜென்மத் தொடர்பாகத்தானிருக்குமென முன் வீட்டுத் தேவகி மாமி கதைத்ததுண்டு அது உண்மைதானோ என்னமோ?
எண்பத்து மூன்று ஜனவரியில் விஜித்த இடமாற்றம் பெற்று எங்களை விட்டுப் பிரிந்தது ஒரு சோக நிகழ்வு. அவன் அழுத அழுகையும் பட்ட பாடும் கொஞ்சமல்ல. கடைசியில் அப்பாவும் நானும் அவனுடன் போய் அவனை விட்டு விட்டு வந்தோம்.
அந்நாட்களில் எங்கள் பகுதியில் தொலைத்தொடர்பு வசதிகளில்லை. கடிதத் தொடர்புகள் தான் சுக செய்திகளைக் கேட்டு கடிதம் போடுவான். நாங்களும் பதில் போடுவோம்.
எண்பத்து மூன்று கலவரம் நடந்த கையோடு அப்பா என்னை மத்திய கிழக்கு நாட்டின் றியாத் என்னுமிடத்திற்கு அனுப்பி விட்டார். அங்கிருந்த போது நான் அவனுக்குப் பல தடவை போன் பண்ணினேன். கடிதங்கள் போட்டேன்.
அங்கிருந்து வந்த பின் அவனது மனைவியின் கொழும்பு வீட்டிற்குப் போனேன். அவ் வீட்டில் வேறு ஆட்கள் குடியிருந்தார்கள். அவர்களுக்கு விஜித்த குடும்பத்தினரைப் பற்றி எதுவும் தெரியவில்லை. எம்பிலிப்பிட்டியவிலுள்ள அவனது வீட்டிற்குப் போகக்கூடிய சூழ்நிலை அப்போது இருக்கவில்லை. றியாத்திலிருந்து நாடு திரும்பிய நான் ஆறு மாதங்களுக்குள் பிரான்ஸ் போய் விட்டேன்.
பிரான்ஸில் நல்ல வேலையும் நல்ல சம்பளமும் கிடைத்தது. கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குள் அக்காவின் திருமணம் தங்கைகளின் படிப்பு, அவர்களின் திருமணம், தம்பியின் படிப்பு, எல்லோரும் வாழக் கூடிய விதத்தில் வீடு என எல்லாக் கடமைகளையும் முடித்த பின் எனது முப்பத்து மூன்றாவது வயதில் பெற்றோர் ஏற்பாடு செய்த அமிர்தா என்கின்ற என் உறவுக்காரப் பெண்ணை இந்தியாவுக்கு வந்து திருமணம் செய்து மீண்டும் பிரான்ஸ் சென்று மனைவியை ஒரு வருடத்திற்குள் அழைப்பித்துக் கொண்டேன்.
மிக மகிழ்ச்சியான எமது இல் வாழ்க்கையில் நான்கு ஆண்டுகளுக்குப் பின் ஒரு பெண் குழந்தையும் இரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு ஆண் குழந்தையும் கிடைத்தனர். முதற் குழந்தை கிடைத்ததோடு அமிர்தா வேலைக்குச் செல்வதை நிறுத்தி குழந்தையைப் பராமரித்தாள். மகன் பிறந்த பின் அவளின் முழு நேரமும் பிள்ளைகளுடனேயே கழிந்தது.
அப்பாவுக்கு உடல் நலக் குறைவாயிருப்பதாக செய்தி கிடைக்கவே எல்லோரும் வர முடியாததால் நான் மட்டும் நாடு திரும்பி ஒரு மாதம் வரை ஊரில் நின்று மீண்டும் பிரான்ஸ் சென்றேன். அடுத்த மாதமே அப்பா காலமாகி விட்டார்.
அப்பா காலமாகி இரு வருடங்களின் பின் என் வாழ்வில் மிகப் பெரிய பேரிழப்பை நான் சந்திக்க நேர்ந்தது ஆம் என் அன்பு மனைவி அமிர்தாவும் என் பாசக்குழந்தைகள் அம்ரிதாவும் மாதுங்கனும் காரில் செல்லும் போது விபத்தொன்றில் சிக்கி அவ்விடத்திலேயே உயிரிழந்தனர். அந்தப் பேரிடி என் மனதை மிக மோசமாகப் பாதிக்கச் செய்து மனநோயாளியாக்கி விட்டிருந்தது. என்னைப் பிரான்ஸ் எடுப்பதற்கு உதவிய என் நண்பன் மனோகரன் தன் கூடவே என்னை வைத்து சிகிச்சையளித்துப் பராமரித்து குணமாக்கினான். தொடர்ந்தும் பிரான்ஸில் இருக்கப் பிடிக்காமல் நாடு திரும்பி அம்மா சகோதரிகள் தம்பி மைத்துனன் மருமக்கள் ஆகியோருடன் வாழ்கின்றேன். இரண்டாவதாக எனக்கொரு மனைவியைத் தேடித் தர அம்மாவும் சகோதரிகளும் பலவிதமாக வற்புறுத்திய போதும் நிர்த்தாட்சண்யமாக அவர்களின் வேண்டுகோளை நிராகரித்து அவர்களுடனேயே வாழ்கிறேன். இந்த நிலைமையில் வாழும் எனக்கு விஜித்தவின் அன்பும் நட்பும் மனதின் ஒரு புறமாக அமிழ்ந்து விட்டதில் தவறில்லையே?
ஆயினும் அவனது கடிதம் அமிழ்ந்து கிடந்த நினைவுகளைக் கிளறி விட்டது. விஜித்த இப்போது எப்படியிருப்பான்? தலைமுடியெல்லாம் நரைத்து கிழவனாகி இருப்பானோ என்றெல்லாம் யோசித்த எனக்கு விஜித்தவின் படங்களைப் பார்க்கும் எண்ணம் ஏற்பட்டது. அவனது படங்கள் இருந்த ஆல்பங்களைத் தேடினேன். விடிந்ததும் அம்மா சகோதரிகளிடம் கேட்டேன். அவையெல்லாம் சுனாமி நீரில் அகப்பட்டு பழுதடைந்து விட்டதாகக் கூறினர்.
சிலவேளை அப்பாவின் அறையில் அவரது பொருட்களுடன் ஏதும் படங்கள் இருக்கக்கூடும். போய்ப் பார் என்றார் அம்மா. அவரின் அறையில் சுவரில் பொருத்தி கண்ணாடியிடப்பட்ட இறாக்கை வடிவிலான தட்டுக்கள் சில இருந்தன.
அவை உயரமாக இருந்ததால் சுனாமி நீரினால் சேதமடையவில்லை என்ற காரணத்தால் சற்று நம்பிக்கையுடன் அவற்றிலும் தேடினேன். எதுவும் கிடைக்கவில்லை. ஆயினும் அப்பாவின் நாட்குறிப்புக் கொப்பிகளில் விஜித்த பற்றி அவன் கடைசியாக எழுதிய கடிதம் பற்றி ஏதும் எழுதியிருப்பார் என்ற நோக்கில் கடிதத்திற்குரிய எண்பத்து மூன்றுக்குரியதான கொப்பியைக் கையிலெடுத்து கொண்டவனாக உட்கார்ந்தேன்.
இந்த இடத்தில் என் அப்பாவைப் பற்றிச் சில வார்த்தை சொல்லியாக வேண்டும். அவர் சிங்கள மொழியில் அழகாகப் பேசுவார். எழுத வாசிக்கவும் நன்றாகத் தெரியும். விஜித்தவுக்கு தமிழில் எழுதவும் பேசவும் அவர்தான் கற்றுக்கொடுத்தார். அதனால் அவனுக்கும் அப்பா மீது வெகு பிரியம். அவரை அவன் அப்பா என்றே அழைப்பான்.
அப்பா அன்றாட விசேட செய்திகளை பெரிய அப்பியாசக் கொப்பியில் மணிச் செய்தியாக எழுதும் வழக்கம் உடையவர். அது வீட்டுச் செய்தியாகவும் இருக்கும். நாட்டுச் செய்தியாகவும் இருக்கும். ஏன் உலகச் செய்தியாகவும் இருக்கும். கொப்பியின் ஒரு பக்கத்தில் பத்து நாட்களுக்குரிய செய்தி அடங்குமாப்போல எழுதுவார்.
ஆயிரத்து தொளாயிரத்து ஐம்பத்தெட்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து அவர் காலமாகும் வரை இருநூறு பக்கங்கள் கொண்ட ஆறு கொப்பிகள் அழகாக இலக்கமிடப்பட்டு அடுக்கியிருந்தார். அவர் கடைசியாக எழுதிய ஆறாவது கொப்பியைப் புரட்டினேன். விஜித்த பற்றி பல சந்தர்ப்பங்களில் எழுதியிருந்தார். அவன் ஊருக்குப் போனது, திரும்பி வந்தது, திருமணம் செய்தது, மாலினியை அழைத்து வந்தது இடமாற்றம் பெற்றுப் போனது, கடைசியாக அவன் கடிதம் அனுப்பியது எல்லாமே எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை அப்பா வாசித்து விட்டு யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைத்திருக்கின்றார் என்று புரிந்தது.
அத்திகதிக்குப் பின் எழுதப்பட்டிருந்த குறிப்புக்களை சுவாரஷ்யமில்லாமல் புரட்டினேன். சிவப்பு மையினால் இரண்டு வரிகளில் ஒரு குறிப்பு!
எனது இன்னுமொரு மகன் விஜித்த மனநிலை பாதிக்கப்பட்டு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டான்
அப்பாவினால் எழுதப்பட்ட இந்தச் சிவப்பு வரிகளைப் படித்து அழ ஆரம்பித்தேன். என் அழுகைச் சத்தம் கேட்டு அனைவரும் ஓடி வந்தனர். செய்தியை அறிந்து எல்லோரும் அழுதனர். அவனுக்காக இந்த கண்ணீர் அஞ்சலியைத் தவிர எங்களால் வேறு என்னதான் செய்ய முடியும்?
திருக்கோவில் யோகா யோகேந்திரன்
இக் கடிதம் யாரால் எழுதப்பட்டிருக்கும்? இதை யார் பிரித்திருப்பார்கள்? இதை ஏன் என்னிடம் தரவில்லை? என்று பல கேள்விகள் மனதில் உதிக்க உறையிலிருந்து கடிதத்தை வெளியில் எடுத்தேன்.
மணி மணியான சிங்கள எழுத்துக்களால் நீண்ட தாளொன்றின் இரு பக்கமும் எழுதப்பட்டிருந்தது. எழுத்தைப் பார்த்ததுமே யாருடைய கடிதம் எனப் புரிந்து கொண்டேன். அக்கணமே கண்கள் கண்ணீரால் நிறைந்தன.
செய்து கொண்டிருந்த வேலையை மறந்தவனாக அப்படியே சுவரில் சாய்ந்து தரையில் உட்கார்ந்தேன். மனது பூராகவும் இனம் புரியாத ஒரு பரபரப்புடன் கடிதத்தை வாசிக்க ஆரம்பித்தேன்.
அந்தக் கடிதத்தை வாசித்து முடிக்க எனக்கு அதிக நேரம் எடுத்தது. அந்தச் சிங்களக் கடிதத்தை இலகுவாக வாசித்துக் கொள்ளுமளவிற்கு எனக்குச் சிங்கள மொழியறிவு இல்லாத போதும் அதை எழுதியவனின் இதயத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளக்கூடிய அறிவு எனக்கு இருந்தது. அதனால் அக்கடிதம் கூறி நிற்கும் எண்ணக்கருவை என்னால் விளங்கிக் கொள்ள முடிந்தது. ஆம் என்னையும் என் குடும்பத்தையும் உயிருக்குயிராய் நேசித்த சகோதர இனத்தவனான என் இனிய நண்பன் விஜித்தவின் கடிதம் தான் அது! இருபது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டிருந்த அக்கடிதம் இன்றுதான் என் கண்ணில் பட்டிருக்கிறது.
கடிதத்தை வாசித்து முடித்த போது நான் நன்றாக அழுது விட்டிருந்தேன். அப்போது ஏதோ அலுவலாக நான் இருந்த பக்கமாக வந்த அத்தான்,. நான் இருந்த கோலத்தைப் பார்த்துத் திடுக்கிட்டவராக 'என்ன தீபன் ஏன் அழுகிறாய்?' என்று கேட்டபடி அருகில் வந்தவர் 'என்ன கடிதம்? அது யார் எழுதியது?" என்று கேட்டார்.
நான் எதுவும் பேசவில்லை. மௌனமாக அத்தானிடம் கடிதத்தைக் கொடுத்தேன்.
'என்ன இது சிங்களக் கடிதம் ? யார் அனுப்பியது ? என்று கேட்டார்.
எனது நண்பன் விஜித்த அனுப்பிய கடிதம் அத்தான். வாசிச்சுப் பாருங்க' என்றேன்.
நானும் அத்தானும் உரையாடிய சத்தம் கேட்டு அவ்விடத்திற்கு அம்மா, அக்கா, தங்கைகள், தம்பி எல்லோருமே வந்து சேர்ந்து விட்டனர். நான் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய் தரையில் உட்கார்ந்திருப்பதையும் அத்தான் கையில் கடிதத்துடன் நிற்பதையும் பார்த்துக் குழப்பமடைந்தவர்களாக ஆளையாள் பார்த்துக் கொண்டனர். அவர்கள் ஒவ்வொருவராக வினாவெழுப்புவதற்குள் அத்தானே விபரம் கூறினார்.
விஜித்தவின் கடிதமென அறிந்ததும் அதை வாசித்துச் சொல்லும் படி எல்லோரும் அவரை வற்புறுத்தினர். அத்தானுக்குச் சிங்களம் தண்ணீர்பட்ட பாடு!
அவர் பதுளையில் பிறந்து வளர்ந்தவர். சிங்கள மீடியத்தில் கல்வி கற்றவர். எண்பத்து மூன்று கலவரத்தில் இடம்பெயர்ந்து கிழக்கு மாகாணத்து வாசியாகி எண்பத்தொன்பதில் ஒரு கோவிலில் அக்காவைக் கண்டு விருப்பப்பட்டு தன் பெற்றோர் மூலமாகப் பெண் கேட்டு முறைப்படி திருமணம் செய்து கொண்டவர்.
அத்தான் கடிதத்தை வாசித்து ஒவ்வொரு வசனமாக தமிழாக்கம் செய்தார்.
அன்பான தீபன்,
'எப்படி இருக்கிறீர்கள்? இருக்கிறீர்களா அல்லது நடந்து முடிந்த கலவரத்தில் நீங்களும் இல்லாமல் போனீர்களா? தெரியவில்லை. கடவுள் கிருபையினால் உங்கள் பகுதியில் அப்படியேதும் நடந்திருக்காதென நம்புகிறேன்.
தீபன் எனக்கு எதுவுமே புரியவில்லை. நாம் எல்லோரும் மனிதர்கள் தானே தீபன் ? ஏன் ஆளை ஆள் அடிக்கிறோம்? ஒருவரையொருவர் கொல்கிறோம்? விலங்குகள் கூட தம்மினத்தைக் கொல்வதில்லையே தீபன் ? நாம் ஏன் இப்படி?
கலவரம் நடந்த போது நானும் மாலினியும் கொழும்பில் தான் இருந்தோம் நான் கண்ட காட்சிகளையும் தமிழ் மக்கள் பட்ட பாடுகளையும் நேரில் உங்களைக் காணும் போது சொல்கிறேன். அந்தக் காட்சிகளைக் கண்டு நான் அடைந்த மன வேதனையும் அழுத அழுகையும் கொஞ்சமல்ல. உண்ண முடியாமல் உறங்க முடியாமல் தவித்தேன்.
அந்த விரும்பத்தகாத காட்சிகளைப் பார்த்தும் அவற்றைத் தடுக்கக் கூடிய நிலைமை இருக்கவில்லை எனக்கு.
நான் மிக மனம் நொந்து போயிருந்த வேளையில் என் நண்பனொருவன் என்னைத் தன் வீட்டிற்கு அழைத்தான். அங்கு நான் சென்றேன். அவனது வீட்டில் இரண்டு தமிழ் குடும்பங்களைக் கொண்ட ஒன்பது பேரைத் தன் வீட்டில் இரகசியமாக மறைத்து வைத்துக் காப்பாற்றிக் கொண்டிருந்தான். அவனது இந்தச் செயல் எனது துயரமான மனதுக்கு சற்றே ஆறுதலளிப்பதாக இருந்தது. அந்த இரு குடும்பங்களையும் காப்பாற்றி நிலைமை சற்று சீரடைந்ததும் அவர்களை அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பும் பணியில் நண்பனுக்கு வலது கரமாக உதவினேன். எனது நண்பனை நினைத்துப் பெருமையாக இருந்தது. ஆக எல்லோருமே தப்பானவர்களல்ல. மனித நேயம் இன்னும் மரணித்துப் போய் விடவில்லையென சிறிது நிம்மதியடைந்தேன். அந்த இரு குடும்பங்களுக்கும் உதவும் போது எனக்கு உன்னையும், அப்பா, அம்மா, தம்பி, தங்கைகளையுமே ஞாபகத்திற்கு வந்தது.
தீபன் ஏனோ தெரியவில்லை நடந்து முடிந்த இந்த அசம்பாவிதத்திற்காக இங்குள்ள எல்லோர் சார்பிலும் உன்னிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் போலிருக்கிறது. மன்னித்துக் கொள் தீபன். அப்பா அம்மா தம்பி தங்கைகளிடமும் நான் மன்னிப்புக் கேட்டதாகச் சொல். கடிதத்தில் சில இடங்களில் எழுத்துக்கள் கலங்கியிருக்கின்றன. அது என் கண்ணீர்த்துளிகள் பட்ட இடங்கள். முடியவில்லை தீபன்... என் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவே இல்லை. வீட்டிலுள்ளவர்கள் சில சமயம் என்னைக் கிண்டல் செய்கிறார்கள். சில சமயம் ஏசுகிறார்கள். என் மனதின் வலி எனக்குத்தானே தெரியும்.
தீபன் நடந்து முடிந்த இந்தக் கோரமான சம்பவங்களை காலம் மறக்கச் செய்யும். நாம் முன்போல ஒற்றுமையாக வாழும் நிலைமை ஏற்படும். அப்போது நாம் சந்திப்போம் அதற்காகப் பிரார்த்திப்போம் காத்திருப்போம். இறைவன் துணை!
உங்களையெல்லாம் மறவாத விஜித்த.
விஜித்தவின் கடிதத்தை அத்தான் வாசித்து முடித்த போது எல்லோருமே அழுது விட்டிருந்தனர். கலவரத்தில் பாதிக்கப்பட்டு ஒரு தம்பியையும் சகல உைடமைகளையும் இழந்து இடம்பெயர்ந்து வந்த அத்தானுக்கு சகோதர இனத்தாருடன் ஏற்பட்டிருந்த கசப்புணர்வு கூட விஜித்தவின் கடிதத்தால் மறைந்து விட்டது போலிருந்தது. அத்தானும் கண் கலங்கி எப்பேர்ப்பட்ட நல்ல மனசு இவனுக்கு என்றார் மனசார!
அவன் மிச்சம் நல்லவன். இஞ்ச அவன் இருந்த காலத்தில் நான் அவனைப் பத்தி அதிசயப்பட்டிருக்கன். அவன் ஒரு தெய்வப் பிறப்பு என்றார் அம்மா.
அம்மாவைத் தொடர்ந்து அக்கா தம்பி தங்கைகள் எல்லாம் விஜித்த பற்றிய தமது மனப்பதிவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
'ஏன் அம்மா இந்தக் கடிதத்தை என்னட்டத் தரல்ல? யார் இதை இந்த அலுமாரிக்குள் மறச்சு வச்சது? என்று அம்மாவைக் கேட்டேன்.
கடிதத்தை நாங்க மறச்சு வைக்கல. இது அப்பாட வேலையாகத்தானிருக்கும். அவர் தானே அடிக்கடி இதைத் திறப்பவர் ? இந்தக் கடிதம் வந்தது கூட எங்களுக்குத் தெரியாதென்றார் அம்மா.
அம்மாவின் விளக்கம் சரிதான். ஏதோ காரணம் கருதி இதைப் பற்றி இவர்களிடம் அப்பா சொல்லாமல் விட்டிருக்கலாம். அவர் தான் இப்போது உயிருடன் இல்லையே என மனசில் நினைத்துக்கொண்டேன்.
'இப்படிப்பட்ட ஒரு நல்லவனைப் பற்றி இது வரை யாருமே என்னிட்ட சொல்லலையே என்று கேட்டார் அத்தான்.
சொல்லலத்தான் அத்தான். ஆனாலும் நாங்க யாருமே அவன மறக்கல. எல்லார்ட்ட மனசிலயும் அவன்ர நினைப்பு இருக்கு. பாவம் கடிதத்தை அனுப்பி விட்டுப் பதிலுக்காக காத்திருப்பான்" என்றேன் நான்.
'இப்பதான் நாட்டு நிலைமை நல்லாயிருக்கே. ஒருக்கப் போய் அவன பார்த்துப் பேசிற்று வரலாமே' என்றார் அம்மா. 'ஓமம்மா கட்டாயம் போகவேணும். ஏன் அத்தான் ஒரு தரம் நான் போகத்தான் வேணும். நீங்களும் வாறீங்களா?' என்று அத்தானை கேட்டேன்.
'கட்டாயம் போவம் எனக்கு அவரைப் பாக்க வேணும் போலிருக்கு' என்றார் அத்தான்.
அன்றிரவு உணவு வேளையிலும் அம்மா விஜித்த பற்றி நினைவு கூரவே எல்லோரும் அவனைப் பற்றி அவனது நல்ல குணங்கள் பற்றிப் பேசினோம். அவனது மனது மிகவும் புண்பட்டிருப்பதை மற்றவர்களை விட என்னால் நன்கு உணர முடிந்தது.
இரவு படுக்கைக்குப் போன எனக்கு தூக்கம் வரவில்லை. விஜித்தவின் நினைப்பே தூங்க விடாமல் என்னை அலைக்கழித்தது.
ஆயிரத்து தொளாயிரத்து எழுபத்தெட்டாம் ஆண்டு. நான் எனது பிரதேசத்து நெல் கொள்வனவு நிலையமொன்றில் சிற்றூழியனாக வேலை செய்தேன். அப்போது களஞ்சியப் பொறுப்பாளராக வந்து சேர்ந்தார் விஜித்த.
ஆரம்பத்தில் சாதாரணமாக பழகிய விஜித்த நாளாக நாளாக என்னிடம் மிகவும் பிரியம் காட்டினார். கிட்டத்தட்ட என்னை விட எட்டு வயது கூடியவர். பல்கலைக்கழகப்பட்டதாரி. நான் சாதாரண தரத்தில் கோட்டை விட்டவன். அவர் வசதியான குடும்பத்தவர். தனது தேவைக்காக கார் கூட வைத்திருக்கிறார். நான் வறிய குடும்பத்தவன்.
இனம், மொழி, வயது, பொருளாதார ஏற்றத்தாழ்வு, கல்வித்தரம் எதுவுமே அவரைக் கட்டுப்படுத்தவில்லை. தீபன் தீபன் மல்லி என்று தன் உடன் பிறப்பாகப் பாசம் காட்டினார்.
அந்த வருடம் வந்த பொங்கல் திருநாளுக்கு அவரை என் வீட்டிற்கு அழைத்தேன். மகிழ்வோடு வந்தார்.
எனது அப்பாவுக்கு சிங்களம் நன்றாகத் தெரியும். அதனால் அப்பாவிடம் பல விடயங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார். அப்பாவை அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. அம்மா தம்பி சகோதரிகள் எல்லோருமே விஜித்தவின் நல்ல பண்புகளையும் அவனது அன்பையும் பார்த்து மிகச் சந்தோஷப்பட்டனர். மொத்தத்தில் விஜித்த என் பெற்றோருக்கு இன்னொரு மகனானார். தம்பி சகோதரிகளுக்கு மற்றொரு அண்ணணானான்.
எங்கள் வீட்டில் நடக்கும் சின்னச் சின்ன நிகழ்வுகளில் கூட விஜித்த பங்கேற்றான். எங்கள் அயலவர்களுடன் அவனும் அன்பாகப் பழகினான். ஊரிலிருந்து வரும் போது றம்புட்டான், கொய்யா, பலாப்பழம் என நிறையவே கொண்டு வருவான். ஏன் இப்படி அதிகமாக என்று கேட்டால் பக்கத்து வீடுகளுக்கும் கொடுக்கச் சொல்வான். சில சமயம் அவனே கொண்டு போய்க் கொடுத்து விட்டு வருவான்.
எம்பிலிப்பிட்டிய என்னும் அவனது கிராமத்திற்கு என்னைப் பல தடவை அழைத்துச் சென்றுள்ளான். அவனுக்கு எண்பத்தோராம் வருடம் கொழும்பில் திருமணம் நடந்த போது எங்கள் குடும்பத்தினர் அனைவரையும் கட்டாயம் வரச் சொல்லி அவனது செலவில் வாகனமொன்றையும் ஏற்பாடு செய்து தந்தான். எல்லோரும் போய் வந்தோம்.
ஆசிரியையான அவனது மனைவியைத் திருமணத்திற்கு அடுத்து வந்த விடுமுறையில் அழைத்து வந்து ஒரு வாரம் வரை எங்கள் வீட்டில் தங்க வைத்து எங்களைச் சந்தோஷப்படுத்தினான். மாலினிக்கு நன்றாகத் தமிழ் பேச முடியுமாதலால் அவளும் எங்களுடன் இயல்பாகப் பழகினாள். வீட்டில் நின்ற போது ஒரு நாள் அவர்களிருவரும் கடைக்குப் போய் சமையலுக்கான எல்லாப் பொருட்களையும் வாங்கி வந்து அம்மாவை சமையலறைப் பக்கம் வரக் கூடாதென்று வெளியேற்றி விட்டு அவர்களிருவருமாகச் சமைத்து எங்களை உட்கார வைத்துப் பரிமாறினர்.
எங்களுக்கும் விஜித்தவுக்குமான நட்பையும் அன்பையும் பார்த்து எமது அயலவர்கள் ஆச்சரியப்படுவதுண்டு. இது பூர்வ ஜென்மத் தொடர்பாகத்தானிருக்குமென முன் வீட்டுத் தேவகி மாமி கதைத்ததுண்டு அது உண்மைதானோ என்னமோ?
எண்பத்து மூன்று ஜனவரியில் விஜித்த இடமாற்றம் பெற்று எங்களை விட்டுப் பிரிந்தது ஒரு சோக நிகழ்வு. அவன் அழுத அழுகையும் பட்ட பாடும் கொஞ்சமல்ல. கடைசியில் அப்பாவும் நானும் அவனுடன் போய் அவனை விட்டு விட்டு வந்தோம்.
அந்நாட்களில் எங்கள் பகுதியில் தொலைத்தொடர்பு வசதிகளில்லை. கடிதத் தொடர்புகள் தான் சுக செய்திகளைக் கேட்டு கடிதம் போடுவான். நாங்களும் பதில் போடுவோம்.
எண்பத்து மூன்று கலவரம் நடந்த கையோடு அப்பா என்னை மத்திய கிழக்கு நாட்டின் றியாத் என்னுமிடத்திற்கு அனுப்பி விட்டார். அங்கிருந்த போது நான் அவனுக்குப் பல தடவை போன் பண்ணினேன். கடிதங்கள் போட்டேன்.
அங்கிருந்து வந்த பின் அவனது மனைவியின் கொழும்பு வீட்டிற்குப் போனேன். அவ் வீட்டில் வேறு ஆட்கள் குடியிருந்தார்கள். அவர்களுக்கு விஜித்த குடும்பத்தினரைப் பற்றி எதுவும் தெரியவில்லை. எம்பிலிப்பிட்டியவிலுள்ள அவனது வீட்டிற்குப் போகக்கூடிய சூழ்நிலை அப்போது இருக்கவில்லை. றியாத்திலிருந்து நாடு திரும்பிய நான் ஆறு மாதங்களுக்குள் பிரான்ஸ் போய் விட்டேன்.
பிரான்ஸில் நல்ல வேலையும் நல்ல சம்பளமும் கிடைத்தது. கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குள் அக்காவின் திருமணம் தங்கைகளின் படிப்பு, அவர்களின் திருமணம், தம்பியின் படிப்பு, எல்லோரும் வாழக் கூடிய விதத்தில் வீடு என எல்லாக் கடமைகளையும் முடித்த பின் எனது முப்பத்து மூன்றாவது வயதில் பெற்றோர் ஏற்பாடு செய்த அமிர்தா என்கின்ற என் உறவுக்காரப் பெண்ணை இந்தியாவுக்கு வந்து திருமணம் செய்து மீண்டும் பிரான்ஸ் சென்று மனைவியை ஒரு வருடத்திற்குள் அழைப்பித்துக் கொண்டேன்.
மிக மகிழ்ச்சியான எமது இல் வாழ்க்கையில் நான்கு ஆண்டுகளுக்குப் பின் ஒரு பெண் குழந்தையும் இரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு ஆண் குழந்தையும் கிடைத்தனர். முதற் குழந்தை கிடைத்ததோடு அமிர்தா வேலைக்குச் செல்வதை நிறுத்தி குழந்தையைப் பராமரித்தாள். மகன் பிறந்த பின் அவளின் முழு நேரமும் பிள்ளைகளுடனேயே கழிந்தது.
அப்பாவுக்கு உடல் நலக் குறைவாயிருப்பதாக செய்தி கிடைக்கவே எல்லோரும் வர முடியாததால் நான் மட்டும் நாடு திரும்பி ஒரு மாதம் வரை ஊரில் நின்று மீண்டும் பிரான்ஸ் சென்றேன். அடுத்த மாதமே அப்பா காலமாகி விட்டார்.
அப்பா காலமாகி இரு வருடங்களின் பின் என் வாழ்வில் மிகப் பெரிய பேரிழப்பை நான் சந்திக்க நேர்ந்தது ஆம் என் அன்பு மனைவி அமிர்தாவும் என் பாசக்குழந்தைகள் அம்ரிதாவும் மாதுங்கனும் காரில் செல்லும் போது விபத்தொன்றில் சிக்கி அவ்விடத்திலேயே உயிரிழந்தனர். அந்தப் பேரிடி என் மனதை மிக மோசமாகப் பாதிக்கச் செய்து மனநோயாளியாக்கி விட்டிருந்தது. என்னைப் பிரான்ஸ் எடுப்பதற்கு உதவிய என் நண்பன் மனோகரன் தன் கூடவே என்னை வைத்து சிகிச்சையளித்துப் பராமரித்து குணமாக்கினான். தொடர்ந்தும் பிரான்ஸில் இருக்கப் பிடிக்காமல் நாடு திரும்பி அம்மா சகோதரிகள் தம்பி மைத்துனன் மருமக்கள் ஆகியோருடன் வாழ்கின்றேன். இரண்டாவதாக எனக்கொரு மனைவியைத் தேடித் தர அம்மாவும் சகோதரிகளும் பலவிதமாக வற்புறுத்திய போதும் நிர்த்தாட்சண்யமாக அவர்களின் வேண்டுகோளை நிராகரித்து அவர்களுடனேயே வாழ்கிறேன். இந்த நிலைமையில் வாழும் எனக்கு விஜித்தவின் அன்பும் நட்பும் மனதின் ஒரு புறமாக அமிழ்ந்து விட்டதில் தவறில்லையே?
ஆயினும் அவனது கடிதம் அமிழ்ந்து கிடந்த நினைவுகளைக் கிளறி விட்டது. விஜித்த இப்போது எப்படியிருப்பான்? தலைமுடியெல்லாம் நரைத்து கிழவனாகி இருப்பானோ என்றெல்லாம் யோசித்த எனக்கு விஜித்தவின் படங்களைப் பார்க்கும் எண்ணம் ஏற்பட்டது. அவனது படங்கள் இருந்த ஆல்பங்களைத் தேடினேன். விடிந்ததும் அம்மா சகோதரிகளிடம் கேட்டேன். அவையெல்லாம் சுனாமி நீரில் அகப்பட்டு பழுதடைந்து விட்டதாகக் கூறினர்.
சிலவேளை அப்பாவின் அறையில் அவரது பொருட்களுடன் ஏதும் படங்கள் இருக்கக்கூடும். போய்ப் பார் என்றார் அம்மா. அவரின் அறையில் சுவரில் பொருத்தி கண்ணாடியிடப்பட்ட இறாக்கை வடிவிலான தட்டுக்கள் சில இருந்தன.
அவை உயரமாக இருந்ததால் சுனாமி நீரினால் சேதமடையவில்லை என்ற காரணத்தால் சற்று நம்பிக்கையுடன் அவற்றிலும் தேடினேன். எதுவும் கிடைக்கவில்லை. ஆயினும் அப்பாவின் நாட்குறிப்புக் கொப்பிகளில் விஜித்த பற்றி அவன் கடைசியாக எழுதிய கடிதம் பற்றி ஏதும் எழுதியிருப்பார் என்ற நோக்கில் கடிதத்திற்குரிய எண்பத்து மூன்றுக்குரியதான கொப்பியைக் கையிலெடுத்து கொண்டவனாக உட்கார்ந்தேன்.
இந்த இடத்தில் என் அப்பாவைப் பற்றிச் சில வார்த்தை சொல்லியாக வேண்டும். அவர் சிங்கள மொழியில் அழகாகப் பேசுவார். எழுத வாசிக்கவும் நன்றாகத் தெரியும். விஜித்தவுக்கு தமிழில் எழுதவும் பேசவும் அவர்தான் கற்றுக்கொடுத்தார். அதனால் அவனுக்கும் அப்பா மீது வெகு பிரியம். அவரை அவன் அப்பா என்றே அழைப்பான்.
அப்பா அன்றாட விசேட செய்திகளை பெரிய அப்பியாசக் கொப்பியில் மணிச் செய்தியாக எழுதும் வழக்கம் உடையவர். அது வீட்டுச் செய்தியாகவும் இருக்கும். நாட்டுச் செய்தியாகவும் இருக்கும். ஏன் உலகச் செய்தியாகவும் இருக்கும். கொப்பியின் ஒரு பக்கத்தில் பத்து நாட்களுக்குரிய செய்தி அடங்குமாப்போல எழுதுவார்.
ஆயிரத்து தொளாயிரத்து ஐம்பத்தெட்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து அவர் காலமாகும் வரை இருநூறு பக்கங்கள் கொண்ட ஆறு கொப்பிகள் அழகாக இலக்கமிடப்பட்டு அடுக்கியிருந்தார். அவர் கடைசியாக எழுதிய ஆறாவது கொப்பியைப் புரட்டினேன். விஜித்த பற்றி பல சந்தர்ப்பங்களில் எழுதியிருந்தார். அவன் ஊருக்குப் போனது, திரும்பி வந்தது, திருமணம் செய்தது, மாலினியை அழைத்து வந்தது இடமாற்றம் பெற்றுப் போனது, கடைசியாக அவன் கடிதம் அனுப்பியது எல்லாமே எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை அப்பா வாசித்து விட்டு யாரிடமும் சொல்லாமல் மறைத்து வைத்திருக்கின்றார் என்று புரிந்தது.
அத்திகதிக்குப் பின் எழுதப்பட்டிருந்த குறிப்புக்களை சுவாரஷ்யமில்லாமல் புரட்டினேன். சிவப்பு மையினால் இரண்டு வரிகளில் ஒரு குறிப்பு!
எனது இன்னுமொரு மகன் விஜித்த மனநிலை பாதிக்கப்பட்டு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டான்
அப்பாவினால் எழுதப்பட்ட இந்தச் சிவப்பு வரிகளைப் படித்து அழ ஆரம்பித்தேன். என் அழுகைச் சத்தம் கேட்டு அனைவரும் ஓடி வந்தனர். செய்தியை அறிந்து எல்லோரும் அழுதனர். அவனுக்காக இந்த கண்ணீர் அஞ்சலியைத் தவிர எங்களால் வேறு என்னதான் செய்ய முடியும்?
திருக்கோவில் யோகா யோகேந்திரன்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக