இதனால் அவர் அங்குள்ள குற்றவாளி குழுக்களால் தாக்கப்படலாம் என அச்சமடைந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.ஆசிப் கடந்த வெள்ளிக்கிழமை குடிவரவு வழக்கறிஞர் ஒருவரை சந்தித்துள்ளார். மேலும் அவர் பிரித்தானியாவில் குடிபெயர்வதற்கான சட்ட திட்டங்கள் தொடர்பாகஆராய்ந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி இரகசிய சந்திப்பானது பிரித்தானியாவில் உள்ள விடுதியொன்றில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச் சந்திப்பின் போது ஆசிப் கலக்கமடைந்து காணப்பட்டதாகவும் தனது தற்போதைய நிலை தொடர்பில் கவலை அடைந்துள்ளதாகவும் மேற்படி வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். மொஹமட் ஆசிப் உட்பட 3 பேர் அச் சர்ச்சையில் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக