தென் பேர்த்தில் லங்டொன் பிராந்தியத்திலுள்ள பூங்காவொன்றில் 7 வயது சிறுமி யொருவரை அணுகிய மேற்படி 84 வயது நபர், அவரை பூங்காவின் வேறொரு பகுதி க்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
13 வயதுக்கு கீழ்ப்பட்ட வயதுடைய சிறுமி ஒருவரிடம் பாலியல் ரீதியான அத்து மீறலில் ஈடுபட்டதாக மேற்படி வயோதிபர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 19 ஆம் திகதி பிரேமன்டில் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக